Wednesday 13 May 2015

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அரசு முடிவு...

நாடு முழுவதும் 6 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்படுவதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரை நகரில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முன்னதாக கடந்த சில வாரங்களாக செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தற்போது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மதுரையில் அமையவுள்ள இந்த எய்ம்ஸ் மருத்துவமனை தென் மாவட்ட மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என கருதப்படுகிறது
.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்தி வரவேற்போம்