Wednesday 22 January 2014

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் - தமிழகம் தழுவிய பட்டினிப் போராட்டம்...


அருமைத்தோழர்களே!21.01.2014 செவ்வாய் அன்று தமிழ் நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக . . . . . 
சிறப்புக் காலமுறை ஊதியத்தை ஒழிக்கப்பட வேண்டும்;சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி ஊழியர்களை நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்; தேர்த லின் போது தமிழக முதல்வர் அளித்த வாக்குறு திப்படி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும்; சாலைப் பணியாளர் களின் 41 மாத பணி நீக்க காலத்தை வரைமுறைப் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல  கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர்,  தமிழகம் முழுவதும் பட்டினிப்   போராட்டம் நடத்தினர்.
தமிழகம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, பேரையூர், வாடிப்பட்டி,மேலூர் ,திருமங்கலம்,மதுரை ஆகிய 6 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது.
மதுரை காளவாசல் (மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் எதிரில்) நடைபெற்ற கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் நமது பி.எஸ். என். எல். ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக மாவட்டத் தலைவர் தோழர்.சி .செல்வின் சத்தியராஜ்,மாவட்டசெயலர் தோழர்.எஸ்.சூரியன் ஆகியோர் நேரடியாக கலந்து கொண்டனர்.போராட்டத்தின் கோரிக்கையை விளக்கியும்,போராட்டம் வெற்றியடைய தோழமை பூர்வமான  வாழ்த்துக்களை கூறியும்  நமது மாவட்டச்செயலர்,தோழர்.எஸ்.சூரியன் உரையாற்றினார்.

தமிழக அரசில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும்,சத்துணவு,அங்கன்வாடி ஊழியர்கள்,ஆண்டாண்டு காலமாக தமிழக அரசில் பணிபுரியும் வருவாய் கிராம உதவியாளர்கள்,மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலர்கள்,கணினி இயக்குனர்கள்,ஆப்பரேட்டர்கள்,துப்பரவு,சுகாதாரப்பணியாளர்கள், ஊர்புற நூலகர்கள் என லட்சக்கணக்கான ஊழியர்கள் கெளரவமான வாழ்க்கை வாழ்வதற்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும்,அரசு ஊழியர் போன்று ஓய்வூதியம் வழங்கிட தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெற்ற போராட்டம் வெல்லட்டும்,வெல்லட்டும். என தோழமையுடன் வாழ்த்துக்களை தெரிவிப்பது உங்கள் . .. . . . . மதுரை சூரியன்.   . 

No comments: