Tuesday 29 December 2015

30.12.15 பனி நிறைவு பாராட்டு விழா - வாழ்த்துக்கள் . . .


ஒரு புன்னகை (SWAS) திட்டத்தின் மூலம் . 100 நாட்கள்சேவை.

அன்பான  தோழர்களே !,  BSNL தொழிற்சங்கங்களின் சங்கங்கள் 1st ஜனவரி (SWAS) திட்டம் "புன்னகையுடன் சேவை"  2016 . இந்த 100 நாட்களில், ஒரு சக்திவாய்ந்த  சேவை தரத்தை மேம்படுத்த மற்றும் கணிசமாக லேண்ட்லைன், மொபைல் எண்ணிக்கை அதிகரிக்க, வாடிக்கையாளர் பாதுகாப்பு சிறப்பு கவனம் கொடுக்க இயக்கம்  நடத்த வேண்டும்..
(i)  இந்த 100 நாட்களில், மேலும் வரும் நாட்களில் நமது வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் திருப்தி சிறப்பு கவனம் கொடுக்க வேண்டும். நாம் மட்டுமே,  அண்மையில் சென்னை வெள்ளத்தின் போது ஒட்டுமொத்த நாட்டின், சேவையை  பிஎஸ்என்எல்  ஊழியர்களும், அதிகாரிகளும் பாதுகாப்பு காட்டியது. கண்ணியமான  மரியாதையான மற்றும் நட்பு வாடிக்கையாளர் மத்தியில் ஏற்பட்டுள்ளது அதன் மூலம் வாடிக்கையாளர் திருப்தி மேம்படுத்த வேண்டும். சிறப்பு கவனம் பில்லிங்,பழுதுதொடர்பான வாடிக்கையாளர்கள் குறைகளை மற்றும் சேவை தொடர்பான அனைத்து விஷயங்களில் முக்கியத்துவம்   வழங்கப்பட வேண்டும்.
 (Ii) இந்த  சேவை உறுதிப்படுத்துவது. கனிவோடு  சேவை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர் திருப்தி உறுதி அளிக்க வேண்டும்.பழுதுகளை 60% அதே நாளில் நீக்கவேண்டும்.  பிராட்பேண்ட் பழுதுகள் நீக்க நடவடிக்கை தேவை. 
 (iii) மொபைல் சேவைத் தரம் தோல்வி இல்லாமல் BTSs செயல்பாட்டை பொறுத்தது. ஒவ்வொரு பிடிஎஸ் கண்டிப்பான கண்காணிப்பு தேவைப்படுகிறது. பழுது நீக்குவதில் , உடனடியாக நடவடிக்கை அது மறுசீரமைப்பு தான் எடுத்து கொள்ள வேண்டும். பிடிஎஸ் பராமரிப்பு அணி திறம்பட செயல்பட  வேண்டும்.. 
(Iv)  பழுது கேபிள் நெட்வொர்க் பராமரித்தல். சிறப்பு கவனத்தை, நமது  செப்பு கேபிள் நெட்வொர்க் பராமரிப்பு மூலம் செலுத்த வேண்டும். ஒரு பழுது  இலவச கேபிள் நெட்வொர்க் பராமரிப்பு ஒரு பெரிய வழியில், லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகளை சரண்டர்  குறைக்கும் உதவும்எஸ்எஸ்ஏ மட்டத்தில் வழிகளை கண்டுபிடிக்க மற்றும் ஒரு பழுது  இலவச கேபிள் நெட்வொர்க் உறுதியான செயல்  வேண்டும். கேபிள் பராமரிப்பு அணிகள் உடனடியாக கேபிள் பராமரிப்பு மற்றும் பழுதுகளை மறுசீரமைப்பு அமைக்கப்பட வேண்டும்.
 (V) லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகளை சரண்டர்  குறைத்தல். அனைத்து தேவையான நடவடிக்கைகளை லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகளை சரண்டரை  நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தற்போது அனைத்து இந்திய  விகிதம் 0.8% இருந்து மாதத்திற்கு 0.4% குறைக்கப்பட்டுள்ளது.
(vi)  மார்க்கெட்டிங் நடவடிக்கைகள் முடுக்கி. செப்டம்பர்,  2015 மாதத்தில், பிஎஸ்என்எல் டிராய் மூலம் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இது தனியார் ஆபரேட்டர்கள், அவர்களது சேவையின் மோசமான தரம், இப்போது கடுமையான விமர்சனம் கீழ் வரும் என்பது உண்மை தான். இந்த நிலைமை திறம்பட பிஎஸ்என்எல் மொபைல், தரைவழி, பிராட்பேண்ட் இணைப்புகளை அதிகரிக்க பயன்படுத்தப்பட வேண்டும். பிஎஸ்என்எல் இரவு இலவச அழைப்பு இலவச ரோமிங், பிராட்பேண்ட் முதல் 2 மாதங்களில் புதிய ப்ரீபெய்ட் / டிராய் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் 80% குறைப்பு, மற்றும் 2 எம்பி வேகம், அறிமுகப்படுத்திய சமீபத்திய வசதிகள் போதுமான புதிய வாடிக்கையாளர்கள் பெற, பொதுமக்கள் மத்தியில் பிரபலமானது . இந்த 100 நாட்களில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.  ஃப்ளெக்ஸ் பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளம்பரம் பயன்படுத்தப்பட வேண்டும்.
(VII) மாதத்திற்கு ஒவ்வொரு ஊழியருக்கும் குறைந்தபட்ச இலக்கு.
* லேண்ட்லைன் (புதிய & மறுதொடர்பு) - 5
* பிராட்பேண்ட் (புதிய & மறுதொடர்பு) - (டிராய் உட்பட) 5
* மொபைல் - 10
ஒவ்வொரு  பிஎஸ்என்எல்  புதிய இணைப்புகளை கொண்டு வர ஒவ்வொரு பணியாளர் புதிய பெறுவதற்கான முதலியன தனது உறவினர்கள், அண்டை, நண்பர்கள் அணுகலாம் தவிர முதலியன மேளா, சாலை நிகழ்ச்சி, பங்கு எடுத்து, பிராட் பேண்ட், மொபைல் முதலியன இருக்கலாம்.
சரணடைந்த தரைவழி / broadbands  மறுசீரமைப்புக்கான ஒரு புதிய இணைப்பு என எண்ணப்படும்.  எஸ்எஸ்ஏ அளவில் அகில இந்தியகூட்டமைப்பு  கோரிக்கைகளை  உடனடியாக சந்தித்து  விவாதிக்க மற்றும் SWAS திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்ற திட்டமிட வேண்டும்

Saturday 26 December 2015

சுழன்றடித்த சுனாமி பேரலை – 11 ஆவது நினைவு தினத்தில் ஒரு நினைவு கூறல்!

"சுனாமி" - பெயரைக் கேட்டால் அழகாய் இருந்தாலும் 2004 ஆம் ஆண்டில் கிட்டதட்ட பல்லாயிரக்கணக்கான பேரை பலிவாங்கிக் கொண்டது இந்த ஆழிப்பேரலை. இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் 2004 ஆம் ஆண்டில் சிறியதாய் தோன்றிய அலை ஒன்று பூதாகரமாய் பெருக்கெடுத்து, தெற்காசிய நாடுகளையே புரட்டிப் போட்டது. உறவினர்கள், நண்பர்கள், உடைமகளை இழந்துவிட்டு பல்லாயிரம் மக்கள் தவியாய் தவித்தனர். என்னவென்றே தெரியாத அந்த பேரலை இன்று எல்லோர் மனதிலும் பாதிப்பாய் பதிந்து போய் கிடக்கின்றது.

துறைமுகப் பேரலை: ஜப்பானிய மொழியில் துறைமுக பேரலை என்பதே சுனாமி என அழைக்கப்படுகிறது. இது தமிழில் ஆழிப்பேரலை என அழைக்கப்படுகிறது.

Friday 25 December 2015

காட்டூன் . . . கார்னர் . . .

டிசம்பர் -25 வெண்மணி தியாகிகள் தினம் . . .

டிசம்பர்-25 வெண்மணி தியாகிகள் நினைவுதினம்....நிலப்பிரபுத்துவ,
சாதிய கொடுமைகளுக்கு எதிராக செங்கொடிஇயக்கம் நடத்திய 
வீரச்சமரில் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகளின்....
நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!வெண்மணியின் வெளிச்சத்தில் 
சாதி-மத வெறிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடசூளுரைப்போம் . . .

 ----நினைவுகளுடன் . . .S. சூரியன் ...D/S-BSNLEU

டிசம்பர் - 25 சார்லி சாப்ளின் நினைவு தினம் . . .


Thursday 24 December 2015

டிசம்பர் -24, எம்.ஜி.ஆர் நினைவு நாள் . . .

தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் தனக்கென ஓரிடத்தைப் பிடித்து, அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன். 
தான் நடித்த பாடலுக்கேற்ப வாழ்ந்தும் காட்டியவர், எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். இலங்கையின் கண்டிக்கு அருகே இருக்கும் நாவலப்பிட்டியில், 1917-ம் ஆண்டு, ஜனவரி 17-ம் நாள், மருதூர் கோபாலமேனன், சத்தியபாமா தம்பதியினருக்கு மகனாய் பிறந்தார் எம்.ஜி.ஆர்.
தந்தையின் பணி காரணமாக கேரளாவிற்கு வந்த இவருடைய குடும்பம், தந்தையின் மறைவுக்குப் பிறகு, கும்பகோணத்தில் குடியேறியது. தன்னுடைய 7-வது வயதில் நாடகக் குழுவில் சேர்ந்து பின்னர் திரைத்துறைக்கு வந்த எம்.ஜி.ஆருக்கு, ராஜகுமாரி திரைப்படம் அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்தது. அரசிளங்குமரி, மன்னாதி மன்னன், நாடோடி மன்னன், அடிமைப்பெண், எங்கள் வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, விவசாயி என பல்வேறு திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ஆர். சமூக சீர்திருத்தக் கருத்துக்களை தன்னுடைய பாடல்கள் மற்றும் திரைப்படங்களில் வலியுறுத்தினார். இதன் மூலம் புரட்சித் தலைவராக ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தார். தொடக்கக் காலத்தில் காங்கிரஸில் ஈடுபாடு கொண்டிருந்த எம்.ஜி.ஆர், பின்னாளில், அறிஞர் அண்ணாவின் பால் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1967ம் ஆண்டு நடிகர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு உயிர்பிழைத்தபோதிலும், எம்ஜிஆரின் குரல் மாறியது. எனினும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர், 1972-ம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். பின்னர், 1977-ல் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று முதன்முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் எம்.ஜி.ஆர்.
தான் இறக்கும் வரை தொடர்ந்து 3 முறை முதலமைச்சராக இருந்த இவரது ஆட்சியின்போது, சத்துணவுத் திட்டம், இலவச சீருடை, காலணி வழங்கும் திட்டம், இலவச பாடநூல் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து, இலவசங்களுக்கு அடித்தளமிட்டார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் உட்பட 5-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன.
1984-
ல் நோய்வாய்ப்பட்டு, சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது நடந்த தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக முதலமைச்சரானார் எம்.ஜி.ஆர். தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே, பரப்புரைக்குச் செல்லாமலேயே, முதலமைச்சரான பெருமை இவர் ஒருவருக்கு மட்டுமே உண்டு. இருந்தும், தன்னுடைய முழு பதவிக்காலம் முடிவதற்குள் 1987-ம் ஆண்டு பதவியிலிருக்கும்போதே உயிரிழந்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. எம்ஜிஆர் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும், இன்றும் போற்றப்படும் தலைவர்களில் ஒருவராக அவர் திகழ்ந்து வருகிறார்
.

Wednesday 23 December 2015

டிசம்பர் - 25, அனைவருக்கும் கிறிஸ்து தின வாழத்துக்கள்.


டிசம்பர் - 24, பெரியார் ஈ.வெ. ரா அவர்களின் நினைவு தினம்.


டிசம்பர் - 24, இனிய மிலாடி நபி வாழ்த்துக்கள் . . .


இன்று திரு .கக்கன், அவர்கள் நினைவு நாள்...(டிசம்பர் 23) . . .

பொதுப்பணித்துறை அமைச்சராக கக்கன் இருந்தபோது ஒருநாள் இரவு பத்து மணிக்கு மேல் மதுரை வந்த அவர், தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். (அந்த விடுதியே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது தான்.) ஆனால் அங்கு வேறு அதிகாரி யாரோ தங்கியிருந்தார்கள். இதையறிந்த கக்கனுடன் வந்த அதிகாரிகளுக்கு கொஞ்சம் ஷாக்காக இருந்தது. தனியார் விடுதிக்குச் செல்லலாம் என்றார்கள் உடனிருந்த அதிகாரிகள். பயணியர்விடுதி கண்காணிப்பாளருக்கோ பதற்றம். "தங்கியிருப்பவரை எழுப்பி விடுகிறேன்" என்றார். ஆனால் கக்கன், "வேண்டாம். அதிகார நடைமுறைப்படி அமைச்சருக்கு தான் இங்கு முன்னுரிமை என்றாலும் இங்கு தங்கியிருப்பவரும் நம்மைப் போன்றவர் தான். தூக்கத்தில் எழுப்பி யாரையும் தொந்தரவு செய்யவேண்டாம்" எனக் கூறிவிட்டு மதுரையிலுள்ள ஒரே அறை கொண்ட தனது தம்பி வீட்டிற்குச் சென்று இரவு தங்கினார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் இதே விடுதியில் தங்கிய அமைச்சர் ஒருவர், தனக்கு சுடசுட தோசை வாங்கிவராத தாசில்தார் மீது தோசையை தூக்கியெறிந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கிறேன்.
அமைச்சராக இருந்த போது அலுவலகத்திலிருந்து காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் கக்கன். கார் வீட்டுக்குள் நுழையும் அந்த வினாடியில் தனது பணியாளர் ஒரு கேனைத் தூக்கி வருவதைப் பார்த்தார். அவரிடம் என்ன என்று கேட்க "அம்மா மண்ணெண்ணெய் வாங்கி வரச் சொன்னார்கள். அது தான் இது.." என்றார். உடனே காரை நிறுத்தியதோடு கேனையும் காம்பவுண்ட் சுவருக்கு வெளியே வைக்கச் சொன்னார். டிரைவரை அனுப்பி வீட்டுக்குள் இருந்து மனைவியை வெளியே வரச்சொல்லி " இந்த மண்ணெண்ணெயை வாங்கி வந்திருப்பவர் யார் தெரியுமா? அவர் அரசு ஊழியர். எனக்கு உதவிக்காக நியமிக்கப்பட்டவர். அவரை உனது சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தக்கூடாது.." என கடுமையாகச் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்திலிருந்த வர்களெல்லாம் பார்த்தார்கள். அழுதுகொண்டே வீட்டுற்குள் சென்றார் கக்கனின் மனைவி. சிறிது நேரம் அங்கு நின்றுவிட்டு பின்னர் வீட்டுக்குள் நுழைந்தார் கக்கன்.