Sunday 13 December 2015

10-12-2015 அகில இந்திய FORUM கூட்ட முடிவுகள் . . .

அருமைத் தோழர்களே ! கடந்த 10-12-2015 அன்று   டெல்லியில் நடைபெற்ற  Forum of BSNL Unions and Associations அகில இந்திய கூட்டம் கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்துள்ளது . . . 
1-1-2016  முதல் 100  நாட்கள் " புன்னகையுடன் சேவை  " என்ற இயக்கத்தை நடத்திட  Forum முடிவெடுத்து வேண்டுகோள் விடுத்துள்ளது . . .
  • மொபைல் ,லேண்ட்லைன் & ப்ராண்ட் பேன்ட் இணைப்புகளை தீவிரப் படுத்துதல்.
  • பழுதற்ற சேவையை உத்தரவாத படுத்துதல்.
  • தரைவழி,  ப்ராண்ட் பேன்ட் மறு  இணைப்பு வழங்குதல்.
  • EB, Leased Lines , CUG, 3-G ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கவனம்.
BSNLஓய்வூதியர்களுக்கு 78.2% பஞ்சப்படி இணைப்பு வழங்குவதில் ஏற்பட்டுள்ள அளவு கடந்த தாமதம் குறித்து Forum கடுமையான அதிருப்தியை தெரிவித்தது. நீண்டகாலமாக இக் கோரிக்கை இழுத்தடிக்கப்பட்டு வருவதால் நாடுமுழுவதும் எதிர்வரும் 22-12-2015 கோரிக்கையை தீர்க்க வலியுறித்தி " கருப்பு பேட்ச் " அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது.
         மேலும், 78.2% பஞ்சப்படி இணைப்பின் அடிப்படையில் அலவன்ஸ்களை உடனடியாக உயர்த்த வேண்டும் என வலியுறித்தி கடிதம் எழுதுவது எனவும் முடிவு செய்துள்ளது.
       இம் முடிவுகளை நமது மதுரை மாவட்டத்தில் சிரமேற் கொண்டு சிறப்பாக அமல் படுத்திட விடுகிறோம்...என்றும் தோழமையுடன், S. சூரியன் ...D/S-BSNLEU.

No comments: