Monday 14 December 2015

டிசம்பர் 15 - தோழர் பி.ராமமூர்த்தி நினைவு நாள் (1908-1987)

தோழர் பி.ராமமூர்த்தி ஒரு சகாப்தம்தேச விடு தலைக்கும்கம்யூனிஸஇயக்கத்துக்கும்தொழிற் சங்க 
இயக்கத்துக்கும்,தேச முன்னேற்றத்துக்கும் அவர்ஆற்றிய சேவையை அளவிட முடியாதுநமது இருபதாம் 
நூற்றாண்டின்முற்பகுதியிலும்,பிற்பகுதி யிலும் நடைபெற்ற முக்கியநிகழ்ச்சிகள் ஒவ்வொன் றிலும்தோழர்
 பி.ஆர்.வகித்த பங்கு சிறப்பானதாகும்.தோழர் பி.ஆர்தமிழ்நாடு மாத்திரமல்ல,அகில இந்தியத் தலைவராக 
விளங்கினார்அன்னிய ஆட்சியாளரும்காங்கிரஸ்ஆட்சியாளரும் தொடுத்த எத்தனையோ சதிவழக்குகளை
பி.ஆர்.சந்தித்தார்.எத்தனையோ சிறைக் கூடங்களில் இன்னல் உற்றார்எத்தனையோ போராட்டங்களில் 
அடிபட்டார்.அவர் மீது போடப்பட்ட சதி வழக்குகளில் அவரே எதிர்வழக்காடிஆட்சியாளரின் சதித்திட்டங்களைத்
 தவிடுபொடியாக்கி விடுதலைபெற்றார்.தொழிலாளிகளின் கோரிக்கைகளை வகுப்பதிலும் அவற்றைஅடை
வதற்கான போராட்ட முறைகளைக் கூறுவதிலும்அப்போராட்டங்களுக்குத்தலைமை தாங்கிவெற்றி தேடிக் 
கொடுப்பதிலும் அவருக்கு நிகர் அவரே.நீதிமன்றங்களிலும்சட்டமன்றநாடாளுமன்றங்களிலும் உழைப்பாளர்
உரிமைகளுக்காக புள்ளி விவரங்களுடனும் பி.ஆர்.நடத்திய வாதங்களை என்றுமேமறக்க முடியாது.நமது 
தேசத்தின் தொழில்கள் ஏகாதிபத்திய சூழ்ச்சி வலையில்மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதிலும்நமது நாட்டு 
விஞ்ஞானிகள்பொறியியல்வல்லுநர்கள் அறிவுச் செல்வத்தையெல்லாம்நமது நாட்டுக்கே பயன்படுத்த
வேண்டுமென்பதிலும் கூர்ந்து அக்கறை காட்டினார்.பி.ஆரின் வாழ்க்கை வரலாறு,
இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாறுதொழிலாளி வர்க்கமும்நடுத்தரவர்க்கங்களும்விவசாயிகளும்,
 மாணவர்களும் நடத்திய போராட்ட வரலாறு.அவரது லட்சியப் பாதையில் நாம் உறுதியோடு நடைபோட 
வேண்டும்அதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
--- நினைவுகளுடன் , எஸ். சூரியன், மாவட்டசெயலர் BSNLEU.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

தோழரின் நினைவினைப் போற்றுவோம்