Wednesday 9 December 2015

அதிர்ச்சி அளிக்கும் உண்மை . . .

இந்தியாவில் 1 லட்சத்து 35ஆயிரம் பெண்களும் 61,000 குழந்தைகளும் காணாமல் போயுள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் எச்.பி.சௌத்ரி தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க 150 சிறப்பு புலனாய்வுப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சி யின் காரணமாக 9,146 பெண்களும் 19,742 குழந்தை களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள் ளார். கடத்தப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தை களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது இது மிகவும் குறைவே.பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவது குறித்து அமைச்சர் தெரிவித்துள்ள எண்கள் வெறும்புள்ளி விபரம் அல்ல. கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒவ்வொருவர் வாழ்விலும் தாங்க முடியாத சோகம் ஒளிந்துள்ளது.2009-12 ஆண்டு கணக்கெடுப்பின்படி பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவதில் தமிழ்நாடு முதல் இடத்திலும், ஆந்திர மாநிலம் இரண்டாம் இடத்திலும், கர்நாடகா மூன்றாம் இடத்திலும் உள்ளன. ‘மிளிரும் தமிழகத்திற்குஇது பெருமை சேர்ப்பதாக இல்லை.பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படு வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதற்காகவே பெண்கள் பெரும்பாலும் கடத்தப்படுகிறார்கள். இதே நோக்கத்திற்காகவே பெரும்பாலும் சிறுமிகளும் கடத்தப்படு கிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை யாகும்.கொத்தடிமைத் தொழிலில் ஈடுபடுத்துவதற் காகவும், அங்கஹீனமாக்கி பிச்சை எடுக்க வைப்பதற்காகவும், கொலை செய்து உடல் உறுப்புகளை திருடுவதற்காகவும் பெரும்பாலும் குழந்தைகள் கடத்தப் படுகிறார்கள் என்று தன்னார்வ தொண்டு நிறுவனம்ஒன்று கடத்தலுக்கான காரணங்களை பட்டியலிடு கிறது.மனிதக் கடத்தலில் தென் மாநிலங்கள்தான் முதல் இடத்தில் உள்ளன.
தமிழகம், கர்நாடகம், ஆந் திரம், கேரளம் ஆகிய தென் மாநிலங்களில் ஒவ் வொரு ஆண்டும் 300 வழக்குகள் பதிவாகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தலைப் பொறுத்தவரை அரசு தெரிவித்துள்ள புள்ளி விபரம்முழுமையானது அல்ல. உண்மையில் பல புகார்கள் காவல்நிலையங்களில் முறையாகப் பதிவு செய்யப் படுவதில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போவது அல்லது கடத்தப்படுவது என்பது தனித்த நிகழ்வுகள் அல்ல. இதன் பின்னால் மிகப்பெரிய வலைப்பின்னல் உள்ளது. காவல்துறையினருக்கு தெரியாமல் இவ்வளவு பெரிய கும்பல் செயல்படுவது சாத்தியமல்ல. சில சமயங்களில் காவல்துறையினரும் கூட இந்த கயமைத்தனத்திற்கு உறுதுணையாக இருந்து வருவது குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகின்றன.
குறிப்பாக பாலியல் தொழில் மற்றும் கொத்தடிமையாக சுரண்டப்படுவோர் குறித்து எளிதாக காவல்துறையினரால் கண்டறிந்து விட முடியும். ஆனால் பெரும்பாலும் தன்னார்வத் தொண்டுநிறுவனங்கள் மற்றும் ஊடகங்களே கொத்தடிமைத் தொழிலாளர் குறித்து உலகின் கவனத்திற்கு கொண்டு வருகின்றனர். இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய- மாநில அரசுகள் மட்டுமின்றி பல்வேறு புல னாய்வு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தொடரக் கூடாது மனித மாண்பை கேள்விக்குள்ளாக்கும் இந்த அவலம்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

இந்நிலை தொடரக் கூடாது ஐயா