Thursday 3 December 2015

தனித் தீவானது சென்னை! - மின்சாரம் துண்டிப்பு; செல்போன், ஏடிஎம் சேவைகள் முடக்கம் உணவு, குடிநீர் கிடைக்காமல் லட்சக்கணக்கானோர் தவிப்பு

கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத வகையில், சென்னையில் கனமழை கொட்டித் தீர்ப்பதால், எங்கு பார்த்தாலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வேளச்சேரி, மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, மீனப்பாக்கம், எழும்பூர், அடையாறு, தாம்பரம், முடிச்சூர், குரோம்பேட்டை, மயிலாப்பூர், கிண்டி என சென்னையின் மிக முக்கியமான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றன. சில இடங்களில் வெள்ளம் 15 அடி உயரத்திற்கு பாய்வதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. ஆயிரக்கணக்கானோர் உணவுக்கும் குடிநீருக்கும் கூட வழியின்றி, உயரமான கட்டடங்களிலும், வீடுகளிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

No comments: