Friday 8 May 2015

+2 தேர்வு 90.6% :திருப்பூர் பவித்ரா, கோவை நிவேதா முதலிடம்.

தமிழகம், புதுச்சேரியில் 8.80 லட்சம் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆவலோடு எதிர்நோக்கியிருந்த பிளஸ் 2 தேர்வு முடிவு 8.5.15 காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
தமிழை முதன்மை பாடமாக எடுத்துப் படித்த திருப்பூர் விகாஸ் வித்யா மெட்ரிக் பள்ளி மாணவி பவித்ரா முதலிடம் பெற்றார். இவர் 1192 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதேபோல் கோவை சவுடேஸ்வரி வித்யா மெட்ரிக் பள்ளி மாணவி நிவேதாவும் 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
1190 மதிப்பெண்கள் பெற்று 4 பேர் இரண்டாம் இடம் பிடித்தனர். ஈரோடு மாவட்ட ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த விக்னேஸ்வரன், நாமக்கல் S.K.V. பள்ளியைச்சேர்ந்த பிரவீண்நாமக்கல்   S.S.M.லக்ஷ்மி யம்மாள் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவர் சரண்ராம், திருச்சி சவுடாம்பிகா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி வித்யவர்ஷினி ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.நாமக்கல் மாவட்டம் டிரினிட்டி அகாடமி மாணவி பாரதி 1189 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.நமது வாழ்த்துக்கள்.

No comments: