Wednesday 18 December 2013

ஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்...

சம்பளம் வழங்காததைக் கண்டித்து BSNLEU+TNTCWU ஆர்ப்பாட்டம்
தொலைத் தொடர்புத்துறை BSNL-லில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தங்களுக்கு சம்பளம் வழங் கப்படாததைக் கண்டித்து திங்கட்கிழமையன்று புதுக்கோட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தொலைத்தொடர்புத் துறையில் கோட்டப் பொறியாளர் (நகரம்), கோட்டப் பொறியாளர்(கிராமம்) பகுதிகளில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் களுக்கு மாதந்தோறும் 10-ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டுமென்பது ஒப்பந்தம். ஆனால் திருச்சி தொலைத் தொடர்பு மாவட் டம், புதுக்கோட்டை கோட்டப் பொறியாளர் பகுதி களில் பணியாற்றும் ஊழி யர்களுக்கு இதுநாள் (டிசம் பர் 16) சம்பளம் வழங்கப் படவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தி யும் எந்தவித சாதகமான பதிலும் வரவில்லை எனவே, ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு BSNLEU சங்கத் தலைவர் கே.நடராஜன் தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி கிளைச் செயலர் பி.ஆறுமுகம், ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கல்லடியான்மாவட்டநிர்வாகிகள் எம். பாலமுருகன், கே.விஸ்வநாதன், ஜான்செல்வராஜ், எஸ்.சண்முகம், ஆர்.ஆனந் தன்,மல்லிகா உள்ளிட்டோர் பேசினர்.

No comments: