Tuesday 3 December 2013

பாராட்டுகிறோம். . . பழங்காநத்தம் கிளையை . . .









அருமைத் தோழர்களே! உங்கள் அனைவருக்கும் நன்றியுடன் கூடிய  வணக்கத்தை மாவட்ட சங்கம் உரித்தாக்கு கிறது.நாம் அனைவ ராலும் பாராட்டும் வண்ணம் நமது பழங்காநத்தம் கிளையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தோழர்கள்,முறையே தலைவர்செயலர்பொருளர் P.ஜெகநாதன்V.K.ராஜமார்த்தாண்டன்M.முருகன்உள்ளிட்ட பழங்காநத்தம் தோழர்கள் அனைவரும் இணைந்து மிக மிக சிறப்பாக முப்பெரும் விழாவை நடத்தியதை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது. பழங்கானத்தம் கிளைக்கு உட்பட்ட அழகப்பா நகர்,பழங்காநத்தம், TVS நகர், ஆகிய மூன்று அலுவலகங் களிலும்  நமது BSNLEU சங்க கொடி ஏற்றம்சங்க பலகை திறப்பில் தோழர்கள்ஜெகநாதன், ராஜமார்த் தாண்டன்நாகசுந்தரம், மீனாட்சி  சுந்தரம், ராமநாதன், முருகன்,கலந்து கொண்டு  ,மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு,பணி ஓய்வில் சென்ற மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு  ஆகிய  நிகழ்ச்சிகளை மிக நேர்த்தியாக செய்தனர். அழகப்பா நகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கிட்டத்தட்ட 50 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் கிளைசெயலர்கள் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டசங்க நிர்வாகிகள் சிறப்புரை நிகழ்த்தினர்.தொடரட்டும் இது போன்ற உத்வீகத்துடன்  நமது BSNLEU சங்க பணி.   
வாழ்த்துக்களுடன் என்றும் தோழமையுடன் எஸ். சூரியன் -DS-BSNLEU

No comments: