Friday 28 August 2015

மதுரையில் புத்தகத் திருவிழா 28.08.15 இன்று தொடங்குகிறது...

மதுரை தமுக்கம் மைதானத்தில் பிரம்மாண்ட புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் முனைவர் இல.சுப்பிரமணியன் இன்று துவக்கி வைக்கிறார்.மதுரை தமுக்கம் மைதானத்தில் வெள்ளியன்று தொடங்கும் பிரம்மாண்ட புத்தக திருவிழா செப்டம்பர் 7-ஆம் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இவ்விழாவை வெள்ளி மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இல.சுப்பிரமணியன் துவக்கி வைக்கிறார். தினமும் மாலை 6 மணிக்கு பட்டிமன்றம், இலக்கியச் சொற்பொழிவு, கவியரங்கம் போன்ற நிகழ்வுகள் நடைபெறவிருக்கிறது. இதில் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உரையாற்ற உள்ளனர். இந்தாண்டு புத்தகக் கண்காட்சியில் வாசகர், எழுத்தாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி பாடப்புத்தகங்கள் பெருமளவில் இடம்பெறுகிறது. இந்த கண்காட்சியின் மூலம் சுமார் 10 இலட்சம் வாசகர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. .டி.எம், குடிநீர், முதலுதவி, கழிப்பறை, தேநீர், உணவக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இப்புத்தக கண்காட்சிக்கு அனுமதி இலவசம் என நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் .கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். வாசிப்பை அதிகப்படுத்துவோம் வளமாகுவோம்.

No comments: