Thursday 9 May 2013


போராட்ட அறைகூவல்


தோழர்களே !

டெல்லியில் இன்று (09.05.2013) நமது FORUM OF BSNL  UNIONS  &  ASSOCIATIONS  கூட்டம் நடைபெற்றது.   அக்கூட்டத்தில் 78.2% அகவிலைப்படி இணைப்பிற்கு உடனடி தீர்வு கோரி, காலவரையற்ற உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவது என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டது.  78.2% அகவிலைப்படி இணைப்பிற்கு ஒப்புதல் அளிக்காமல் DoT  அந்த விஷயத்தை BRPSE-ன் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பது காலம் தாழ்த்தும் போக்கே ஆகும்.  

ஆழ்ந்த விவாதத்திற்கு பின்னர், நமது FORUM  கீழ்கண்ட போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பதென முடிவெடுத்தது.  

இன்றைய கூட்டத்தில்,

தோழர் நம்பூதிரி (CONVENER ) 
தோழர் அபிமன்யு - பொதுச்செயலர், BSNLEU  
தோழர் C. SINGH  - பொதுச்செயலர்,  NFTE  
தோழர் செபாஸ்டின் - பொதுச்செயலர், SNEA 
தோழர் PRAHALAD  RAI  - பொதுச்செயலர், AIBSNLEA 
தோழர் ஜெயப்ரகாஷ் - பொதுச்செயலர், FNTO 
தோழர் சுரேஷ்குமார் - பொதுச்செயலர், BSNL  MS  
தோழர் ஷர்மா - தலைவர், WRU   ஆகியோர் கலந்து கொண்டனர்.

போராட்ட திட்டம்:

22.05.2013     -     ஆர்ப்பாட்டம்
05.06.2013     -     தர்ணா

12.06.2013 முதல் "கால வரையற்ற வேலை நிறுத்தம் "

நமது கிளைச்சங்கங்கள் தற்போதிருந்தே போராட்ட தயாரிப்பு பணிகளில்  ஈடுபடுமாறு வேண்டுகிறோம்.   அனைத்து போராட்ட திட்டங்களும் முழு வெற்றி பெற அயராது பணி புரிய வேண்டுகிறோம்.   போராட்டத்திற்கு தயாராவோம். 

என்றும் தோழமையுடன்,

எஸ். சூரியன், 
CONVENER , FORUM  &  மாவட்டச்செயலர்,  BSNLEU.



No comments: