Monday 25 January 2016

இந்திய வீராங்கனை பிவி சிந்து 2வது முறையாக சாம்பியன்...

மலேசியாவில் ஓபனில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான பேட்மிண்டன் இறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஸ்காட்லாந்து வீராங்கனை கில்மோர் கிரிஸ்டி-யை எதிர்த்து விளையாடினார்.  விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இந்திய வீராங்கனை சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய சிந்து முதல் செட்டை 21-15 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார்தொடர்ந்து 2வது செட்டிலும் சிந்து, 21-9 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று மலேசிய ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார் இந்த வெற்றியின் மூலம் சிந்து, மலேசிய ஓபன் சாம்பியன் பட்டம் வெல்வது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு, 2013ஆம் ஆண்டு சிந்து சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது...

No comments: