Friday 12 December 2014

திண்டுக்கல்லில் 11.12.14 திரளான ஆர்பாட்டம். . .

தோழர்களே! BSNL அதிகாரிகளும், ஊழியர்களுமாக திண்டுக்கல்லில் 11.12.14திரளானஆர்பாட்டத்தை  தொலைபேசியகம் முன்பு நடத்தினார்கள் .
 ஆர்பாட்டகூட்டத்திற்கு BSNLEU தோழர்.எஸ்.பரிமள ரெங்கராஜ் தலைமை தாங்கினார், 15 பெண்கள் உட்பட100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது நல்ல அம்சமாகும்.நடைபெற்ற ஆர்பாட்ட கூட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி TEPU சார்பாக தோழர்.மதன முனியப்பன், SNEA சார்பாக தோழர்.சந்திரகுமார், FNTO சார்பாக விஸ்வநாதன், NFTE சார்பாக தோழர். கோவிந்தராஜ் ஆகியோர் உரை நிகழ்த்தினர். BSNLEU மாநில துணைத்தலைவர் தோழர்.எஸ். ஜான் போர்ஜியா நிறைவுரை நிகழ்த்தினார், SNEA சார்பாக தோழியர். சுசிலாமேரி  நன்றி கூற ஆர்பாட்ட கூட்டம் இனிதே நிறைவுற்றது. திண்டுக்கல் தோழர்களை மாவட்டFORUM சார்பாக வாழ்த்துகிறோம்.
பழனியில் ஆர்பாட்டம் : 11.12.14 அன்று காலை பழனி தொலைபேசியகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு தோழர் அன்பழகன் தலைமைதாங்கினார். ஆர்பாட்ட கூட்டத்தில் கோரிக்கையை விளக்கி கிளைச் செயலர் தோழர்.கே. பழனிகுமார் உரையாற்றினார். மேலும்  தோழர்கள், சாது சிலுவைமணி, செந்தில் ஆகியோரும் பேசினார்கள். இறுதியாக ஒப்பந்த ஊழியர்கள் சார்பாக தோழர்.திருமூர்த்தி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
வத்தலகுண்டு : 11.12.14 அன்று வத்தலகுண்டு தொலைபேசியகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தோழர்.மகாராஜன் தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி கிளைச் செயலர் தோழர்.பிச்சைகன்னு, மாவட்ட சங்க நிர்வாகி தோழர் காசிராஜன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

No comments: