Wednesday 20 July 2016

இன்று (ஜூலை 20) தோழர் ஏ.நல்லசிவன் நினைவுநாள்...

இளைய தலைமுறைக்கு சிறந்த முன்னுதாரணம்

ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டுக்குரிய இயல்பான குணங்களினால் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சரியானஸ்தாபன கோட்பாடுகளின் அடிப்படை யில்  கட்டி வளர்ப்பதில் பெரும்பங்கு வகித்தார். சட்டமன்ற மேலவையிலும் நாடாளு மன்ற மாநிலங்களவையிலும் அவர் பணியாற்றிய போதுதமிழகத்தின் பிரச்சனைகளை ஆழ்ந்து கவனித்து அதை மன்றங்களில் எடுத்துரைத்தார். வாச்சாத்தி பிரச்சனையை மக்களுடைய கவனத்திற்கு கொண்டு வருவதிலும் அந்த மக்களுக்கு நீதி கிடைக்கவும் அவர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தார். அதேபோன்று தமிழில் தந்தி வசதியை கொண்டுவர அவர் எடுத்த சிறப்பான முயற்சிகளை அனைவரும் பாராட்டினர். கட்சியின் சார்பிலும், தொழிற்சங்கத்தின் சார்பிலும் பல முறை அவர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார். தனது பயண அனுபவங்களை பத்திரிகைகளிலும், நூல் வடிவாகவும் வெளியிட்டுள்ளார்.கட்சியிலும், தொழிற்சங்க த்திலும் எத்தனையோ பொறுப்புக்களை வகித்து வந்த போதிலும் மிகுந்த எளிமையான ஒரு வாழ்க்கையை கடைசிவரை வாழ்ந்து வந்தார். அவருடைய தன்னடக்கம் அனைத்து கம்யூனிஸ்டுகளும், பொது நல ஊழியர்களும் பின்பற்றத்தக்கதாகும்.1940 ல் கட்சியில் சேர்ந்த அவர் 1997ம் ஆண்டுல் காலமாகும் வரை 57 ஆண்டுகள் உழைக்கும் மக்களுக்கும், இடதுசாரி இயக்கத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆற்றியுள்ள அரும்பணிகள் இளைய தலைமுறையினருக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக என்றென்றும் விளங்கும்.

No comments: