Thursday 17 November 2016

‘மரணத்தை பரிசளிக்கும் மன்னன்’ - விமர்சனம்...

‘ஒரு குளத்தில் உள்ள முதலைகளையெல்லாம் கொல்லப் போகிறேன் என்று கூறி அந்தக் குளத்தின் நீரையெல்லாம் பிரதமர் மோடிவடித்துவிட்டார். ஆனால் மிகப் பெரும் முதலைகள் எல்லாம் ஊர்ந்து வெளியில் சென்று சுகபோகமாக வாழ்கின்றன; குளத்தில் உள்ள சிறிய மீன்கள் எல்லாம் செத்துக் கொண்டிருக்கின்றன’.
விவாதத்தில் பங்கேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சீத்தாராம் யெச்சூரி, மோடி அரசின் இந்த நடவடிக்கையை மிகக் கடுமையாக விமர்சித்தார். 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியநாட்டில் வெறும் 2.6 கோடி மக்கள் மட்டுமே கிரெடிட் கார்டுகள் வைத்துள்ளனர் என்று அவர்சுட்டிக்காட்டினார். வரலாற்று நிகழ்வுகளில் இருந்து பல்வேறு சான்றுகளை எடுத்துரைத்த யெச்சூரி, பிரெஞ்சு புரட்சி காலகட்டத் தில் ஏழைகளை வதைத்த மன்னர் குடும்பத்தினருடன் மோடியை ஒப்பிட்டார்.
பிரெஞ்சு புரட்சியின் போது அந்நாட்டின் மகாராணி மேரி ஆண்டோநிட்டே, சாப்பிடுவதற்கு ரொட்டிகள் இல்லை என்று கதறிய ஏழைகளை பார்த்து,கேக் சாப்பிடுங்களேன் என்று கூறியதை நினைவுகூர்ந்த யெச்சூரி, பிரெஞ்சு மகாராணியை போல இன்றைக்கு பிரதமர் மோடி, ரூபாய்நோட்டுகள் இல்லாவிட்டால் என்ன, பிளாஸ்டிக் ரூபாய்களை பயன்படுத்துங்கள் என்கிறார் என சாடினார்.
பிரதமர் மோடியின் செயல்பாடுகளை இன்னும் கடுமையாக விமர்சித்த சீத்தாராம் யெச்சூரி, அவரை ரோமானிய மன்னருடன் ஒப்பிட்டு பேசினார். "ரோமானிய மன்னரை பற்றி அவரது அவையிலிருந்த செனட் உறுப்பினர் ஒருவர், இப்படி கூறுவார்: ரோமைப் பற்றிநமது மன்னருக்கு நன்றாக தெரியும். ரோம் என்றால் மாபெரும் மக்கள் கூட்டம். அந்த மக்கள் கூட்டத்தின் முன்பு கண்கட்டி வித்தைகள் காட்டி, அவர்களது கவனத்தை திசைதிருப்புவார்.
அவர்கள் அதில் மயங்கி உண்மைகளை தேடிக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களது சுதந்திரத்தை பறித்துக் கொள்வார். ரோம் நகரத்து இதயத் துடிப்பு என்பது இந்த மாபெரும் செனட் சபையின் மார்பிள் கற்களில் இல்லை; இந்த இதய துடிப்பு மக்கள் கூட்டம் அமர்ந்திருக்கிற மண்ணில் இருக்கிறது. அவர்கள் மன்னனின் புகழைப் பாடிக் கொண்டுஇருக்கும் வேளையில், மன்னன் அவர்களுக்கு மரணத்தை பரிசளித்தான்" என்று சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்டார்.
தனது பேச்சின்போது கொல்கத்தாவில் நவம்பர் 8ம்தேதியன்று ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவிப்பதற்கு முன்பேஇந்தியன் வங்கி கணக்கில் பாஜக சார்பில் கோடிக்கணக்கான ரூபாய் டெபாசிட்செய்யப்பட்டுள்ள விபரத்தை ஆதாரத்துடன் அவையில் முன்வைத்தார் யெச்சூரி. அதேபோல, பிரதமரை வாழ்த்தி, பணமில்லாத பொருளாதாரத்தை பிரதமர் உருவாக்கிவிட்டதாக கூறிபேடிஎம்என்ற நிறுவனத்தின் சார்பில் முழு பக்க விளம்பரம் அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய யெச்சூரி, "இவர்கள் சொல்வது ஜெய்ஹிந்த் அல்ல; ஜியோஹிந்த்" என சாடினார்.
பேடிஎம் நிறுவனமும் ஜியோ நிறுவனமும் அம்பானியின் நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்திலிருந்து 86 சதவீத பணப்பரிவர்த்தனையை செல்லாதது ஆக்கிவிட்ட பிரதமர் மோடியால், பணமில்லாத பரிவர்த்தனையை எப்படி கொண்டு வர முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.இந்தியப் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு, கறுப்புப் பொருளாதாரமே எனக் குறிப்பிட்ட யெச்சூரி, கறுப்புப் பொருளாதாரம் என்பது ரியல் எஸ்டேட் வர்த்தகத்திலும், தங்கத்திலும், இதரப் பல வடிவங்களிலும் முதலீடு செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கறுப்புப் பணத்தை கைப்பற்றப்போவதாக பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், உண்மையில் கறுப்புப் பணம்வெளிநாடுகளில், பாதுகாப்பானசொர்க்கங்களில்பாதுகாப்பாகவே உள்ளது என்றும் யெச்சூரி கூறினார்.

No comments: