Thursday 16 July 2015

என்.சங்கரய்யாவுக்கு வயது 94 - - தலைவர்கள் வாழ்த்து…

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்த தலைவர்களில் ஒருவருமான விடுதலைப்போராட்ட வீரர் என்.சங்கரய்யாவின் 94வது பிறந்த நாள் புதனன்று (2015 ஜூலை15) கொண்டாடப்பட்டது.

ஜோஷி முதல் யெச்சூரி வரை
இளம் வயதிலேயே மாணவர் சங்கத் தலைவராகவும், விடுதலைப் போராட்ட வீரராகவும், விவசாயி கள் சங்கத் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 பேரில் ஒருவராக வும் விளங்கியவர் என்.சங்கரய்யா.விடுதலைப் போராட்ட காலத்திலும், அதற்கு பிறகும் 8 ஆண்டுகள் சிறைவாசமும், 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்து கம்யூனிச இயக்கத்தை கட்டி வளர்த்ததோடு, விடுதலைப் போராட்டத்தை வழி நடத்தியவர்.பொதுவாழ்க்கைக்கு இலக்கண மாகவும், சிம்மக்குரலோடு கர்ஜித்து இளைஞர்களை எழுச்சிகொள்ளச் செய்யும், உத்வேகமூட் டும் பேச்சாற்றலும் கொண்டவர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளர்கள் பி.சி.ஜோஷி, பி.டி.ரணதிவே, அஜய் கோஷ், .எம்.எஸ்.நம்பூதிரிபாட் ஆகியோர் தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உரு வானது முதல் பி.சுந்தரய்யா, ஹரிகிஷன் சிங் சுர்ஜித், பிரகாஷ்காரத், சீத்தாராம் யெச்சூரி வரை என 8 பொதுச் செயலாளர்களுடன் தோளோடு தோள் நின்று பணி யாற்றி வருபவர் என்.சங்கரய்யா.
தலைவர்கள் வாழ்த்து
மூன்று தலைமுறைகளோடு பணியாற்றியதோழர் என்.சங்க ரய்யா, அவரது மனைவி நவ மணியம்மாள் ஆகியோரை குரோம்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், .கே.பத்மநாபன், மாநிலச் செய லாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரத ராசன், .சவுந்தரராசன் எம்எல்ஏ,கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ,மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.நூர்முகமது, எம்.என்.எஸ். வெங்கட்டராமன், .லாசர் எம்எல்ஏ, மாநிலக்குழு உறுப்பினர் கள் தே.லட்சுமணன், டி.ரவீந்திரன், .பீம்ராவ் எம்எல்ஏ, கே.நாக ராஜன், எஸ்.கண்ணன், எஸ்.ரமணி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் .பாக்கியம், பல்லாவ ரம் பகுதிச் செயலாளர் எஸ்.நரசிம்மன் உள்ளிட்டோர் சால்வை அணி வித்து வாழ்த்து தெரிவித்தனர்.காயிதேமில்லத் பேரன் தாவூத் மியாகான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments: