Thursday 9 July 2015

கிரீஸ் மக்களுக்கு காஸ்ட்ரோ வாழ்த்து . . .

சர்வதேச நிதி நிறு வனங்களுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள கிரேக்க அரசைப்பாராட்டுகிறேன் என்று கியூப புரட்சியின் நாயகன் பிடல் காஸ்ட்ரோ வாழ்த்து தெரிவித்துள்ளார். சிக்கன நடவடிக்கை என்ற பெயரிலான மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான கிரீஸ் மக்களின் வாக்குகள் ஊக்க மளிக்கின்றன என்று கூறியுள்ள அவர், கியூப மக்க ளுக்கு கிரீஸ் மிகவும் நெருக்கமானதாகும்.
கிரேக்கர்கள்தான் எங்களுக் குத் தத்துவத்தைக் கொடுத்தார்கள். பள்ளிகளில் அதைத்தான் நாங் கள் படித்தோம். தற்போதைய சூழலில் கிரீஸ் மக்களின் இந்த தைரியம் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாட்டு மக்களுக்கு பெரும் உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட் டுள்ளார்.

No comments: