Friday 19 February 2016

18-02-16 மதுரை -G.M (O)ல் கூட்டாக சந்திப்பு இயக்கம்...

அருமைத் தோழர்களே ! மதுரை SSA-யில் கேபிள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு 18-02-16 தேதி ஆனபோதும், ஜனவரிமாத  ஊதியம் பட்டுவாடா செய்யப்படவில்லை, 5 மாதத்திற்கு முன்பே பணி நிறைவு செய்யப்போகும் ஊழியர்களுக்கு பென்ஷன் பேப்பரை அனுப்பப்பட வேண்டும் என்ற உத்தரவு இருந்த போதிலும், இதுகாறும் மார்ச்-2016 பணி நிறைவு செய்பவர்களின் பென்ஷன் பேப்பர் கூட DOT CELLக்கு அனுப்பப்படவில்லை. ஒப்பந்த ஊழியர்களுக்கு EPF, E-Pass Book, ESI  முறைப்படுத்த Nodal Officer நியமிக்கப்படவில்லை. பரிவு அடிப்படையிலான பணி நியமனத்தில் கூட அலட்சியம். நிர்வாகம் ஏற்றுக்கொண்ட மாற்றலில் கூட தேவையற்ற காலதாமதம். இதுபோன்ற கோரிக்கைகளின் தீர்விற்காக BSNLEU + TNTCWU இரு மாவட்ட சங்கங்களும் 18-02-16 வியாழன் அன்று DGM (Hr)-ஐ கூட்டாக சந்திப்பு இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தது.
மாவட்டம் முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட தோழர்கள் மதுரை பொதுமேலாளர் அலுவலகத்தை வந்தடைந்தனர்.காலை முதல் மாலை வரை மாவட்ட சங்க நிர்வாகிகள் DGM (Hr) அறையில் சத்தியாகிரக இயக்கத்தை நடத்தினர். இறுதியாக DGM (Hr)-ன்  எழுத்துப் பூர்வமான உறுதி மொழி கடிதத்தின் அடிப்படையில் போராட்டம் நிறைவுற்றது. குறுகிய கால அழைப்பில் கூட உடனடியாக திரண்டு வந்த அனைத்து தோழர்களுக்கும்,  BSNLEU + TNTCWU இரு மாவட்ட சங்கங்கள் சார்பாக நன்றியையும், பாராட்டுக்களையும்தெரிவித்துக்கொல்கிறோம். போராட்ட நேரத்தில் தோழமையோடு பங்கேற்று உதவி செய்த SNEA மாநில உதவிச் செயலர் தோழர்.M.சந்திர சேகர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments: