Saturday 20 February 2016

மகாராஷ்டிராவில் நமது BSNLEU விரிவடைந்த CEC...

அருமைத் தோழர்களே ! 19-02-16 முதல் 3 நாட்களுக்கு மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில்  நமது BSNLEU விரிவடைந்த மத்திய  செயற்குழு மிகவும் உற்சாகமாக  எழுச்சியுடன் தொடங்கியது ...

முதல் நிகழ்வாக தேசிய கொடியை, நமது அகில இந்திய தலைவர், தோழர் பல்பீர் சிங் ஏற்றி வைத்தார். சங்க கொடியை நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யு , வின்னதிரும் கோஷங்களுக்கிடையே, ஏற்றி வைத்தார்நமது சங்க புரவலர் தோழர் V .A .N .நம்பூதிரி, முன்னிலை வகிக்க, தியாகிகள் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தியாகிகள் நினைவு ஸ்துபிக்கு வீர வணக்கம் செலுத்திய பின், நிகழ்வுகள் துவங்கினமகாராஷ்டிரா மாநில CITU பொது செயலர் தோழர் டாக்டர் கார்கி முறைப்படி, செயற்குழுவை துவக்கி வைத்தார். அகமத்நகர் CGM வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர் தொலை தொடர்பு மூத்த தொழிற்சங்க தலைவர் தோழர் V .A .N . நம்பூதிரி சிறப்புரை வழங்க, நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, விரிவாக கூட்ட நோக்கங்களையும், விவாத பொருளையும் அறிமுக படுத்தி விளக்க உரை வழங்கினார்.
நாடு முழுவதுலுமிருந்து மாவட்ட செயலர்கள்  இந் நிகழ்வில்கலந்து கொண்டனர். நமது   மதுரை  மாவட்டம் சங்கம் சார்பாக, மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஜான்போர்ஜியா, விரிவடைந்த மத்திய செயற்குழுவில் பங்கேற்றார்
. விரிவடைந்த மத்திய செயற்குழு அனைத்து வகையிலும் வெற்றிபெற மதுரை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.

No comments: