Tuesday 16 February 2016

அரசு ஊழியர்கள் போராட்டம் -BSNLEUஆதரவு இயக்கம்...

அருமைத் தோழர்களே ! தமிழ்நாடு முழுவதும் கடந்த 6 நாட்களாக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இணைந்து 20 அம்ச கோரிக்கையை வலியுறித்தி மிகவும் சக்தியாக வேலைநிறுத்தம்-மறியல்-கைது என தொடர் இயக்கத்தை நடத்தி வருகின்றனர். போராடும் ஊழியர் சங்கங்களின் தலைவர்களை அழைத்து நியாமான முறையில் பேசித்தீர்க்க வேண்டிய அரசு மவுனம்காப்பது  நியாயம் அல்ல. உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை தீர்க்க வலியுறித்தி நமது BSNLEU தமிழ்  மாநில அறைகூவலுக்கிணங்க மதுரை பொது மேலாளர் அலுவலத்தில் மதியம் 1 மணிக்கு நடைபெற்ற ஆதரவு இயக்கத்திற்கு நமது மாவட்ட தலைவர் தோழர்.C. செல்வின் சத்தியராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதே போன்று திண்டுக்கல்லிலும் ஆதரவு இயக்கம் நடைபெற்றுள்ளது.
மதுரையில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் + ஆசிரியர்கள் மறியல் போரில் நமது  மாவட்ட செயலர் தோழர்.சூரியன் கலந்துகொடு வாழ்த்துரை வழங்கினார்.

No comments: