ஆங்கிலேயர்களிடம் இருந்து, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு உப்பு சத்யாகிரகம், ஒத்துழையாமை இயக்கும் உள்ளிட்ட பல்வேறு போரட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் முக்கியமானது "வெள்ளையனே வெளியேறு' போராட்டம். மகாத்மா காந்தி துவக்கிய இப்போராட்டத்தில், லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதன் நினைவு தினம் இன்று (ஆக.,9ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இப்போராட்டத்தில் ஈடுபட்டு இறந்தவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இத்தினம்கடைபிடிக்கப்படுகிறது.
செய் அல்லது செத்துமடி :
செய் அல்லது செத்துமடி :

ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு பயப்படாமல், மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். அறவழியில் துவங்கிய இப்போராட்டம், வன்முறையாக மாறியது. லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இது ஆங்கிலேயர்கள் மனதில், இனிமேலும் இந்தியாவை நாம் ஆள முடியாது என உணர வைத்தது. அந்தளவு போராட்டம் தீவிரமாக நடந்தது. இதன் பின், ஐந்து ஆண்டுகள் கழித்து இதே ஆகஸ்ட் மாதம் இந்தியா சுதந்திர நாடாக உருவானது.
No comments:
Post a Comment