Sunday 30 October 2016

30.10.2016 தோழர்.பி.மோகன் நினைவுநாள்...

அருமைத் தோழர்களே !
 30.10.2016 மதுரைபாராளுமன்ற உறுப்பினர்  தோழர்பி.மோகன்
அவர்களின் 
நினைவுநாள்மதுரை மக்களின்அனைவரது அன்பை பெற்றவர்
 என்றுசொன்னால் அது மிகையாகாது.தோழர்.P.மோகன் என்று சொன்னால் எந்தஅரசியல் கட்சிகளுக்கும்எந்த சாதிமதம்எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவராக மதுரையை வளம் வந்த பெருமைமிகு 
தோழர்.பி.மோகன் ஆவார். 
மதுரை மண்ணின் மைந்தராக அனைவரயும் பெயர் சொல்லி அழைக்க கூடியஅளவில் மக்களோடு இரண்டற கலந்த தலைவன் தோழர்.P.மோகன் ஆகும்.நமதுபகுதியில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்கு ஆதரவளித்துவாழ்த்திய அன்புத்தலைவர் அவர்எந்த பகுதிஊழியர்கள்மக்கள் போராடினாலும் அங்கு ஓடோடி வந்து குரல் கொடுத்த தலைவன்மதுரை மக்களின்முன்னேற்றத்திற்காகஅரசு மருத்துவமனை முன்னேற்றம் போன்றவற்றில் தனிக்கவனம் செலுத்திய மக்கள்தலைவர்செம்மொழிக்காக நாடாளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுத்த உத்தமர் தோழர்.P.மோகன்ஆகும்.பாராளுமன்ற ஒதிக்கீடு நிதிதனை மக்கள் நலத் திட்டங்களுக்காகவே முழுக்க முழுக்க முன் நின்றுபணியாற்றிய பண்பாளர்.மாணவ பருவம் முதற் கொண்டு இறுதி
வரை தான் கொண்ட மார்க்சிய கொள்கையில்உறுதியாக நின்ற உயர்ந்த மனிதர் தோழர்.Pமோகன் 2009 ஆம் ஆண்டு-அக்டோபர் 30   நம்மை விட்டுப் பிரிந்த அன்புத்தலைவன் தோழர்மோகன்  மறைந்து
 இன்றோடு 7 ஆண்டுகள் உருண் டோடி  விட்டதுஉழைப்பாளிவர்க்கத்திற்காக தனது
 இந் நுயிரை ஈந்த அந்த தலைவன் விட்டுச் சென்ற பணிகளை நாம் தொடர்ந்து போராடிவெல்வோம் என இந் நாளில் சபதம் ஏற்போம்.

No comments: