Saturday 26 July 2014

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் . . .

காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் இன்று இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள்  கிடைத்தன. ஆண்கள் பிரிவில் அபிநவ் பிந்தரா தங்கப்பதக்கம் வென்றார். மகளிர் பிரிவில் மலைக்கா  வெள்ளிப் பதக்கம்   வென்றார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் நாளில் இந்தியா 2 தங்கம் உள்ளிட்ட 7 பதக்கங்களை பெற்றிருந்தது. இரண்டாம் நாளான இன்று மேலும் இரண்டு பதக்கங்கள் கிடைத்து, மொத்தம் 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலத்துடன் இந்தியா, பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில்உள்ளது.இரண்டாம் நாளான இன்று, பெண்கள் 10 மீட்டர் துப்பாக்கிசுடும் போட்டியில், இந்தியாவின் மலைக்கா கோயல், வெள்ளிப்பதக்கம் வென்று, இரண்டாம் நாளில் இந்தியாவின் பதக்கப்பட்டியலை உயர்த்தினார்.இதன் பின்னர் நடந்த ஆண்கள் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் அபிநவ் பிந்தரா, 10 மீட்டர் ரைபிள் பிரிவில், தங்கப்பதக்கம் வென்றார். இந்த பிரிவில் 205.3 புள்ளிகள் பெற்று, காமன்வெல்த் போட்டிகளில் புதிய சாதனை படைத்தார் இது காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு கிடைக்கும் 3வது தங்கப்பதக்கம் ஆகும். காமன்வெல்த் போட்டியில், அபிநவ் பிந்தரா தனிப்பட்ட முறையில் பெறும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பளூதூக்குதலில் வெண்கலம்மகளிர் பிரிவு, 53 கிலோ பிரிவில், இந்தியாவின் சந்தோஷி மட்சா வெண்கலப்பதக்கம் வென்றார்.

No comments: