Tuesday 8 July 2014

மக்களை முட்டாள் ஆக்கும் மோடி அரசு . . .

மக்கள் உங்களுக்கு தேர்தலில் அதிகாரம் வழங்கியிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது விலைவாசியை விண்ணிலேயே வைத்திருப்பதற்கான அதிகாரம் அல்ல. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் ஆட்சியின்போதும் விலைவாசி உயர்வுக்கு எதிராக பெரும் போராட் டம் நடந்தது. அப்போது பாரதிய ஜனதா கட்சியும் விலைவாசி உயர்வை எதிர்த்தது. ஆனால் இப் போது ஆட்சிக்கு வந்துள்ள பாரதிய ஜனதா கட்சியும் அதே பாதையில்தான் செல்கிறது. எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
மக்களுக்கு மாற்றத்தை காட்ட வேண்டு மானால் முதலில் அதிகரிக்கும் உணவுப் பொருள் விலை உயர்வை தடுத்து நிறுத்துங்கள்.வறுமைக்கோடு குறித்து ரங்கராஜன் குழுவின் அறிக்கை வந்துள்ளது. இந்த நாட்டின் ஏழைகள் மீது எப்படிப்பட்ட தாக்குதலைத் தொடுக்கிறீர்கள்? அது என்ன ரங்கராஜன் குழு அறிக்கை? மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறீர்கள். இது நாடாளுமன்றம். மக்களின் இந்த மாமன்றத்தை முட்டாளாக்க முயற்சி செய்யாதீர்கள்!’-

மாநிலங்களவையில் விலை உயர்வு குறித்து சிபிஎம் தலைவர் சீத்தாராம் யெச்சூரி பேசிய போது கூறியது.

No comments: