Friday 25 July 2014

BSNLகாசுவல்&காண்ட்ராக்ட் ஊழியர் போராட்ட அறைகூவல்.

அருமைத் தோழர்களே! புவனேஷ்வரில் BSNL காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின் மத்திய செயற்குழு கூட்டம் கடந்த  18-01-2014 மற்றும் 19-01-2014 தேதிகளில் நடைபெற்றது . அக் கூட்டத்தில் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் பிரச்சனைகள் தீர்விற்கு ஒரு போராட்ட திட்டம் உருவாக்க பட்டுள்ளது. நமது BSNLஊழியர் சங்கத்தின் பிப்ரவரி மாதம் நடைபெற்ற  ராஜ்கோட் மத்திய  செயற்குழு BSNLகாசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின் அறைகூவலை வெற்றிகரமாக்க கேட்டு கொண்டது .அந்த அடிப்படையில் தற்போது 21.07.14 அன்று டெல்லியில் கலந்து கொண்ட  BSNL  காசுவல்   மற்றும்   காண்ட்ராக்ட் ஊழியர் சம்மேளனத்தின்மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்து  போராட்ட  அறைகூவல்   விடப்பட்டுள்ளது .
  • 26-08-2014 அன்று மாவட்ட தலைநகரங்களில்  தர்ணா போராட்டம்
  • 25-09-2014 அன்று மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் நோக்கி பேரணி 
  • 15-10-2014 அன்று CMD அலுவலகம் நோக்கி பேரணி பிரச்சனைகள் தீராவிட்டால் ஒரு நாள் வேலை நிறுத்தம் (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)                                       கோரிக்கைகள் :-
  1. விடுபட்ட ஒப்பந்த/காசுவல் ஊழியர்களை நிரந்தப்படுத்த வேண்டும்.
  2. அரசாங்கத்தின் உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்.
  3. சமுதாய பாதுகாப்பு அம்சங்கள் ஆன EPF/ESI/போனஸ்/கிராஜூவிட்டி ஆகியவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
  4. பி எஸ் என் எல் நிர்வாகமே அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.
  5. சமவேலைக்கு சமஊதியத்தை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும்
  6. EPF கணக்கை நிர்வாகமே தொடங்க வேண்டும்.
  7. வீட்டு வாடகை படி மற்றும் நிர்வாக குடியிருப்புகளை ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
  8. பழி வாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
  9. BSNL காசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர் சம்மேளனத்திற்கு அங்கீகாரம் தரப்பட வேண்டும்.ஒப்பந்த ஊழியர் சங்கத்தின்  அனைத்திந்திய மாநாட்டை  தமிழ் மாநில சங்கம் எதிர் வரும் 2014 டிசம்பர் மாதம் நடத்த இசைவு தந்துள்ளது.

No comments: