Monday 30 March 2015

29.03.15 ஆண்டிபட்டியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கம்.

அருமைத் தோழர்களே ! 29.03.15 அன்று மாலை 3 மணிக்கு ஆண்டிபட்டி பேருந்து நிலையத்தில் துவங்கி, நகர் முழுவதும்  இரவு 7 மணி வரை ஆண்டிபட்டி SDE தோழர். தங்கமணி அவர்கள் தலைமையில்  கையெழுத்து  இயக்கம் மிகவும் சிறப்பாக  நடைபெற்றது . . . 
ஆண்டிபட்டியில் கையெழுத்து இயக்க ஏற்பாட்டை தோழர்கள் மிக சிறப்பாக செய்து இருந்தனர். முன் கூட்டியே காவல் துறை அனுமதி, ஆட்டோவில் மைக் வைத்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களிடம் BSNL  ஊழியர்களும், அதிகாரிகளும் இந்திய நாடு முழுவதும் தேச பக்த இயக்கமாக நடத்துகின்ற "SAVE BSNL" கையெழுத்து இயக்கத்தை நடத்துகின்ற ஒரு பகுதியாகவே ஆண்டிபட்டியிலும் நடந்தது.
ஆண்டிபட்டியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை  மதுரை தொலை தொடர்பு மாவட்ட  FORUM கண்வீனரும், BSNLEU மாவட்ட செயலருமான தோழர் எஸ். சூரியன் துவக்கிவைத்து கையெழுத்து இயக்கத்தின் அவசியம் மற்றும் நோக்கம் குறித்து விரிவாக உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியின் போது முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஆசையன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். BSNLEU மாவட்ட சங்க துணைத் தலைவர் தோழர்.T.K. சீனிவாசன், எஸ்.ராஜன் , என். முத்துரத்தினம் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். இறுதியாக BSNLEU மாநில சங்க துணைத் தலைவர் தோழர்.எஸ். ஜான் போர்ஜியா நிகழ்ச்சிக்கு நிறைவுரை நிகழ்த்தினார்.

தேனி மாவட்ட குறிப்பாக ஆண்டிபட்டித் தோழர்களுக்கு மாவட்ட சங்கம் மனப் பூர்வமான வாழ்த்துக்களை, பாராட்டுக்களை உரித்தாக்குகிறது....
--- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ---D/S-BSNLEU.

No comments: