Tuesday 17 March 2015

முதல் தனியார் விமான நிலையம் அடுத்த மாதம் திறப்பு . . .

இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள துர்காபூர் நகரில் வரும் ஏப்ரல் 14-ம் தேதியிலிருந்து செயல்படத் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
துர்காபூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த மாநில போக்குவரத்து செயலாளர் அலாபன் பண்டோபத்யாய், விமான நிலையத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் இறுதி உரிமம் இன்னும் ஒரு மாதத்திற்குள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும்தெரிவித்தார்.
பெங்கால் ஏரோட்ரோபோலிஸ் ப்ராஜக்ட்ஸ் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தால் துவங்கப்படவுள்ள இந்த விமான நிலையத்திற்காண அனைத்து நடைமுறைகளும் குறித்த நேரத்தில் நடந்து முடிந்தால் வங்காள நாட்காட்டியின் முதல் நாளான ஏப்ரல் 14 அன்று இந்த விமான நிலையம் திறக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

No comments: