Wednesday 13 November 2013

செய்தி துளிகளில் சில....

செய்தி குறிப்பு . . . 

தோழியர் K .K .விஜயா ( SR TOA கேரளா மாநிலம்)--- நெகிழ்ச்சி.... 
   நவம்பர் 6 முதல் 8 வரை நமது BSNLEU  கேரள மாநிலச்சங்கத்தின் 7 -வது மாநில மாநாடு கோட்டயத்தில் நடைபெற்றது. நமது பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார். அதற்குப்பின்னர் தோழர் ,தோழியர்களுக்கு சந்தேகங்கள் ,விளக்கங்கள் கேட்கலாம் என வழக்கம்போல் அறிவிக்கப்பட்டது. பலரும் தங்களது சந்தேகங்களை,விளக்கங்களை சீட்டில் எழுதி கொடுத்தனர். அதில் ஒரு சீட்டில் எழுதி இருந்ததை நமது பொதுச்செயலர் முகமலர்ச்சியோடு படிக்கிறார். அக்கடித வாசகம் ....
     தோழரே!,வணக்கம்.. என் மொத்த மாத சம்பளம் இப்போது அரை லட்சத்தை தாண்டிவிட்டது. நான் கனவில் கூட ஒரு நாள் என் சம்பளம்  அரை  லட்சத்தை தாண்டும்  என்று என் வாழ்வில் எதிர் பார்த்தது இல்லை . பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தால்  மட்டுமே இதை சாத்தியமாக்க  முடிந்தது. எனவே,BSNL ஊழியர்களின் பாதுகாவலன்,மற்றும் BSNL நிறுவன பாதுகாவலன் நமது BSNLEU சங்கத்திற்கு என்னை போன்ற அணைவரும் என்றென்றும் நன்றி கடன் பெற்றுள்ளோம்.
 "காஸியாபாத் பொதுமேலாளர் இடமாற்றம்
நவம்பர் 16, 2012-ல் யுனைட்டெட் போஃரத்தின் சார்பில் நாம் நடத்திய வேலைநிறுத்தத்தின்  காரணமாகவும் நமது மத்தியசங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாகவும் நமது  BSNL ஊழியர்சங்கத்தின் காஸியாபாத் மாவட்டசெயலர் தோழர் சுகேந்தர் பால் சிங் கொலையில் தொடர்புடைய காஸியாபாத் பொது மேலாளர் அதேஷ் குமார் குப்தாவை இவ்வளவு கால தாமதத்திற்கு பிறகாவது  கார்ப்பரேட் நிர்வாகம் இடமாற்றம் செய்துள்ளதே!
 விடுமுறை நாள் மாற்றம்      
                                     மொஹரம்  பண்டிகைக்கான  BSNL விடுமுறை 14-11-2013 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்பொழுது 15-11-2013 (வெள்ளி கிழமைஎன மாற்றப்பட்டு டெல்லி கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள நமது (CCM) முதன்மை பொது மேலாளர் அலுவலகமும்,15-11-2013 விடுமுறைக்கான உத்தரவிட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம். 
TTA தேர்வு முடிவுகள் . . .
 ஏற்கனவே,TTA தேர்வு எழுதி நமது மாவட்டம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டத்திற்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த TTA தேர்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது நமது  மதுரை மாவட்டத்தில் கீழ்க்கண்ட தோழர்கள் TTA ஆக தேர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு நமது  BSNLEU மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக் களையும் பாராட்டுக் களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
1. தோழர். R.நாகேந்திரன், Sr.TOA, உசிலம்பட்டி
2.    “      R.கனகராஜ், Sr.TOA, தெப்பக்குளம், மதுரை
3.    “      A.மருதுமணிகண்டன், Sr.TOA, சோழவந்தான்
4.    “      V.தங்கவேல், TM, திண்டுக்கல் 
5.    “      P.ரிச்சர்டு, Sr.TOA,தல்லாகுளம் , மதுரை
இவர்கள் அனைவருக்கும் எதிர்வரும் 25.11.2013 அன்று சென்னையில் TTA பயிர்ச்சி நடைபெற உள்ளது. 
---என்றும் தோழமையுடன் 
எஸ். சூரியன்,மாவட்டசெயலர்.

No comments: