Tuesday 19 November 2013

ஜெய்ராம்ரமேஷ் சொந்த கருத்து என்று காங்கிரஸ் கூறுகிறது.


ராகுலை மன்னிப்பு கேட்க சொன்ன ஜெய்ராம் ரமேஷ்: சொந்த கருத்து என்கிறது காங்கிரஸ்!
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியது அவரது சொந்த கருத்து என்று காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.
தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, உத்தரபிரதேச மாநிலம் முஷாஃபர்நகரில் நடந்த கலவரத்துக்கு பாரதிய ஜனதாதான் காரணம் என்றும், அந்த கலவரத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருடன் பாகிஸ்தானின் .எஸ்.. அமைப்பு தொடர்பு கொண்டு இருப்பதாகவும் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாரதிய ஜனதா, இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரை தொடர்ந்து, வருங்காலத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் பேசுமாறு ராகுல் காந்திக்கு தேர்த்ல ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேசை சந்தித்து பேசிய பத்திரிகையாளர்கள், முஷாஃபர்நகர் கலவரம் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்து முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி இருப்பதாகவும், எனவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்என்றும்யோசனைதெரிவித்தனர்.
அதற்கு ஜெய்ராம் ரமேஷ், இந்த கோரிக்கையை ராகுல் காந்தி பரிசீலிக்கலாம் என்று கூறினார். அத்துடன், .எஸ்.. அமைப்புடன் தொடர்பு படுத்தி ராகுல் காந்தி கூறிய கருத்து பற்றி முஸ்லிம்கள் அல்லாத தனது நண்பர்கள் சிலர் கூட வருத்தம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். என்றாலும் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் ராகுல் காந்தி பேசி இருக்கமாட்டார் என்றும் அப்போது ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டார்.
தனது கருத்துக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற தொனியில் ஜெய்ராம் ரமேஷ் கூறியது பற்றி காங்கிரஸ் கருத்து தெரிவித்து உள்ளது.
இதுப ற்றி அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மீம் அப்சல் கூறுகையில், "ஜெய்ராம் ரமேஷ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் என்ன கூறி இருந்தாலும்அது அவருடைய சொந்த கருத்துதான். காங்கிரஸ் கட்சியின் கருத்து ஆகாது" என்றார். 

No comments: