Friday 22 November 2013

ஜனநாயக சக்திகள் அனைவரும் கண்டிக்கவேண்டிய செயல்...

அனைத்து மக்களின் மதிப்பு மிக்க தலைவர் தோழர். ஜோதிபாசு சிலை உடைப்பு : திரிணாமுல் குண்டர்கள் காட்டுமிராண்டித்தனம்
மேற்குவங்கத்தில் கொல்கத்தாவுக்கு அருகில் உள்ள ஹெளராவில் அமைந்திருந்த வங்கமக்களின் பிரியமிக்க தலைவர் ஜோதிபாசுவின் சிலையை திரிணாமுல் குண்டர்கள் உடைத்துத் தள்ளினர். தகர்க்கப்பட்ட சிலை மீது தார்பூசி வெறியாட்டம் போட்டனர்.கடந்த 19ம்தேதியன்று இரவு இந்தச் சம்பவம் நடந்தது. வடக்கு ஹெளராவில் உள்ள 1வது வார்டில் ஜே.என்.முகர்ஜிசாலையில் ஜோதிபாசு சிலைஅமைந்திருந்தது. அருகிலிருந்த புகழ்பெற்ற வங்காளிசங்கீத அறிஞர் புலக்பந்தோ பாத்யாயாவின் சிலையையும் திரிணாமுல் குண்டர்கள் தார்பூசி அசிங்கப்படுத்தினர். மேலும், அந்த இடத்திற்குப் பக்கத்தில் உள்ள ஒரு துவக்கப்பள்ளியையும் திரிணாமுல் குண்டர்கள் தீயிட்டுக் கொளுத் தினர்.இவர்களின் அநாகரிகச் செயலைக் கண்டித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பெருந்திரளாகக் கூடி மறுநாள் 20ஆம்தேதி காலை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இந்த மறியல் நீண்டநேரம் நடைபெற்றது.வன்முறைச் சம்பவத்திற்கு திரிணாமுல் கட்சியே காரணம்.ஹெளரா நகரசபைத் தேர் தலையொட்டி திரிணாமுல் கட்சியின் இந்த வெறியாட்டம் நடந்தது.மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் மீதும் கட்சியின் தலைவர்கள் மீதும் ஊழியர்கள் மீதும் திரிணாமுல் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர் 19ஆம்தேதியன்று ஹெளராநகரசபை 12வது வார்டு வேட்பாளர் விஸ்வரூப் கோஷ், சால்கியா பகுதிக்குழுச் செயலாளர் ஒங்கார் பானர்ஜியும் திரிணாமுல் குண்டர்களால் தாக்கப்பட்டனர்..
 காட்டுமிராண்டி தனமான இச் செயலை வண்மையாக கண்டிக்கின்றோம்.....

No comments: