Monday 25 November 2013

BSNLEU மாவட்ட சங்கம் அஞ்சலி செலுத்துகிறது. . .

கூட்டுப் போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தியவர் தோழர் எஸ்.எஸ்.தியாகராஜன்இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் பேச்சு

ஏஐடியுசி அகிலஇந்திய துணைத்தலைவர் தோழர் எஸ்.எஸ்.தியாகராஜன் சனிக்கிழமையன்று (நவ.23) உடல்நலக்குறைவால் காலமானார் சிஐடியு சார்பில் .சவுந்தரராசன் எம்எல்ஏ உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர் தோழர் டி.கே.ரங்கராஜன் எம்.பி.,CPI(M) பேசுகையில், மறைந்த தோழர் எஸ்.எஸ்.தியாகராஜனிடம் மத்திய மாநில அரசுகள் மக்கள் மீது அடிக்கடி தொடரும் தாக்குதல் குறித்தும் அதற்கு எதிராக இயக்கங்கள் நடத்துவதுகுறித்தும் பல முறை விவாதித்துள்ளோம். தோழர் எஸ்.எஸ்.தியாகராஜனின் இழப்பு செங்கொடி சங்கத்திற்கு பேரிழப்பாகும்.அவர் விட்டுசென்ற பணியை நாம் அனைவரும் தொடர்ந்து செய்வதே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும் தொழிற்சங்க பொறுப்புகளிலும் சிறந்து விளங்கிய தோழர் எஸ்.எஸ்.தியாகராஜன். உடல் நிலை சரியில்லாத போதும் அதைப்பற்றி கவலைப் படாமல் பணியாற்றியவர்.தஞ்சை மாவட்டத்தில் பிறந்து படித்து பொறியாளராக திகழ்ந்தவர்,. தான் சொல்ல வேண்டிய கருத்துகளை நேரடியாக சொல்பவர்.. இரங்கல் கூட்டத்தில் சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் ஆர்.கருமலையான், உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.நமது BSNLEU மாவட்ட சங்கம் தோழர்.எஸ்.எஸ்.தியாகராஜன் மறைவிற்கு அஞ்சலி செலுத்துகிறது.

No comments: