Tuesday 10 June 2014

அந்நிய முதலீட்டை அதிகரிக்க BJP அரசு நடவடிக்கை . . .

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணை தலைவர் ஹமீது அன்சாரி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.குடியரசுத் தலைவர் உரையில் . . .
அந்நியர், தனியார்
அந்நிய முதலீட்டை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற் கொள்ளும்பாதுகாப்புத் துறையில் தனியார் முதலீடு ஊக்குவிக் கப்படும்.அணுமின் நிலைய திட்டங்கள் மேம் படுத்தப்படும்.ஜப்பான், சீனாவுடனான நட்புறவு வலுப் படுத்தப்படும்.வேளாண் துறையில் முதலீடு அதிகரிக் கப்படும்.சிறு துளி நீரும் பெரும் மதிப்படையது. நீர் பாதுகாப்பை உறுதி செய்ய பிரதான் மந்திரி கிரிஷி சஞ்சாய் யோஜனா செயல்படும்.இளைஞர்களுக்காக ஆன்லைன் படிப்புகள், வகுப்பறை அமைக்கப் படும்.நீதித்துறை மேம்பாட்டிற்காக நீதி மன்றங்களை மேம்படுத்தும் திட்டத்தை அரசு மேற்கொள்ளும்.தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிகை எடுக்கப்படும்.கங்கை நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.நிலக்கரி, கனிமங்கள், அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு தெளிவான நெறிமுறை களை அரசு வகுக்கும்.மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படும்.மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலகங்கள் சீரமைக்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இளைஞர்களுக்கு வேலை தொடர்பான ஆலோசனையும், பயிற்சியும் வழங்க ஏற்பாடு செய்யப் படும்.தேசிய எரிசக்தி கொள்கை உரு வாக்கப்படும். மரபுசாரா எரிசக்தி, புதுப் பிக்கத்தக்க எரிசக்தித் துறைகள் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தீவிரவாதம், வன்முறை, கலவரங்கள், போதைப் பொருள் கடத்தல், சைபர் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்.கடலோர பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை அரசாங்கம் உணர்ந்திருப்பதால் தேசிய கடல்சார் ஆணையம் அமைக்கப்படும்.ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (ஒன் ரேங்க் ஒன் பென்ஷன்) திட்டம் அமல்படுத்தப்படும். போரில் உயிர் துறந்த வீரர்களுக்கு நினைவிடம் அமைக்கப்படும்.

No comments: