Monday 9 June 2014

இன்று-june 10, தோழர் கே.முத்தையா நினைவுநாள் . . .

அவர் ஒரு பல்கலைக் கழகம்

தோழர் கே.முத்தையா அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயில்கிற காலத்திலேயே,பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்தவர். நாட்டின் விடுதலைக்காகவும், விடுதலைக்குப் பின்பு மக்களின் விடியலுக்காகவும் களம் கண்டு இன்னல்களை இன்முகத்துடன் ஏற்றவர்.
தீக்கதிர் நாளேட்டின் அடிநாதமாக ஒலித்தவர். செம்மலர் ஏட்டை வழிநடத்தியவர்தமுஎகசவின் ஸ்தாபக தலைவர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், இலக்கிய விமர்சகர் என அவருக்கு பலமுகம் - எனினும் தோழர்களிடம் எப்போதும் சிரித்த முகம்.காட்சிக்கு எளியவராய் - கடமையில் பெரியவராய் திகழ்ந்த தோழர் கே.முத்தையா நினைவு  தொடர உறுதிகொள்வோம்!

No comments: