Friday 27 March 2015

26.03.15 மதுரையில் 3 இடங்களில் கையெழுத்து இயக்கம்...

அருமைத் தோழர்களே ! 26.03.15 அன்று  மாலையில்  மதுரையில், பெரியார் பஸ் நிலையம், ஆரப்பாளையம்பஸ்நிலையம்,மாட்டுத்தாவணி பஸ் நிலையம் ஆகிய 3 இடங்களில்  கையெழுத்து இயக்கம் மிக சிறப்பாக நடைபெற்றது ...
ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் AIIEA சங்கத்தின் சார்பாக இன்சூரன்ஸ் தோழர்கள் பாரட்டக்கூடிய அளவில் கிட்டத்தட்ட 50 பேர் அதிக எண்ணிக்கையில் ஈடு பட்டனர். அனைவருக்கும் நமது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே போன்று மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் நமது BSNLEU தோழர்கள் கிட்டத்தட்ட  25 பேர் கலந்து கொண்டு  பஸ் நிலையத்தின் பல்வேறு பக்கங்களுக்கும் சென்று அனைத்து மக்களிடமும் விளக்க நோட்டிஸ் வழங்கி பொது மக்களிடமும் கையெழுத்தை பெற்றனர்.
மேலும் பெரியார் பஸ் நிலையத்தில் 10 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள் பங்கு பெற்று பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கத்தை நடத்தினார்கள்  அனைவருக்கும் நமது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பொது மக்களிடம் "SAVE BSNL" என்ற கோரிக்கையை வலியுறித்தி நோட்டிஸ் கொடுத்து கையெழுத்து பெறுகின்ற பொழுது பல்வேறு அனுபவங்கள் நமக்கு கிடைக்கின்றது. தொடர்ந்து நமது இயக்கத்தை நடத்துவோம், அதே வேகத்துடன் எதிர் வரும் ஏப்ரல் மாதம் 21 & 22 ஆகிய இரு நாட்கள் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவோம்.

--- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ...D/S-BSNLEU

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

கையெழுத்து இயக்கம் வெற்றிபெற வாழ்த்துகின்றேன்