Thursday 4 June 2015

03.06.15 சென்னையில் BSNLEU மாநில செயற்குழு...

அருமைத் தோழர்களே ! 03.06.15 அன்று சென்னை, கிண்டி CITU அலுவலகத்தில மாநிலத் தலைவர் தோழர்.எஸ். செல்லப்பா அவர்களின் நமது  BSNLEU மாநில செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது ...  BSNLEU சங்க கொடியை சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலர் தோழர்.பி. அபிமன்யு ஏற்றிவைத்து செயற்குழு கூட்டத்தில் துவக்க உரை நிகழ்த்தினார். அஞ்சலி உரையை தோழர். வெங்கட்ராமன் நிகழ்த்த, வரவேற் புரையை தோழர்.கே.சீனுவாசன் நிகழ்த்தியபின்னர்,  மாநிலசெயலர் தோழர் எ.பாபுராதா கிருஷ்ணன் அறிக்கைவைத்து அறிமுக உரை நிகழ்த்தினார். 
அறிக்கைமீது நமது மாவட்ட செயலர் தோழர்.எஸ். சூரியன் உட்பட அனைத்து மாவட்ட செயலர்களும் விவாதித்தனர். செயற்குழு நடந்து முடிந்த ஏப்ரல்-21 &22 போராட்டம் மற்றும் செப்டம்பர்-2 அகில இந்திய வேலைநிறுத்தம், ஜூன்-10 ஒப்பந்த ஊழியர் பெருந்திரள் தார்ணா உட்பட அனைத்து ஆய்படு பொருள்களின் மீது ஆழமான விவாதத்தை நடத்தி எதிர்கால திட்டம் குறித்து முடிவெடுத்தது. கையெழுத்து இயக்கம், போராட்டம் போன்ற பணிகளில் ஈடு பட்டவர்களுக்கு செயற்குழு பாராட்டுகளை தெரிவித்தது.

No comments: