Monday 29 June 2015

தோழர்P.முருகேசன் மறைந்தார்,வருந்துகிறோம் ... கண்ணீர் அஞ்சலி.

அருமைத் தோழர்களே ! தமிழக "லைன் ஸ்டாப்" இயக்கத்தில்,ஒப்பந்த ஊழியர் சங்க வளர்ச்சியில், நமது கே.ஜி. போஸ் அணியின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய பங்காற்றியவர் தோழர் பி. முருகேசன் , (வயது-70) 28.06.15 அன்று மதுரையில் ஒரு "டூ வீலர்" விபத்தில், சிகிச்சை பலனளிக்காது இரவு 03.00 மணிக்குமேல் மரணமடைந்து விட்டார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோழரின்  மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலியை  உரித்தாக்குகின்றோம். கண்ணீர் அஞ்சலி செலுத்து கின்றோம். 
மதுரை விளாங்குடி, விவேகானந்தர் தெருவில் அவரது இல்லத்தில்  இருந்து 29.06.15 இன்று  மதியம் 3 மணிக்கு இறுதி சடங்கு நிகழ்ச்சி நடைபெறும். 

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

தோழரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்