Monday 8 June 2015

அம்பேத்கர்- பெரியார் வாசிப்பு வட்டத்திற்கு தடை நீக்கம்...

சென்னை ஐஐடியில் அம்பேத்கர், பெரியார் வாசிப்பு வட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர் அமைப்புடன் ஐஐடி நிர்வாகம் ஞாயிறன்று நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் தடை நீக்கப்பட்டுள்ளதாக ஐஐடி அறிவித்துள்ளது.மேலும் அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டம் சுயேட்சையான மாணவர் அமைப்பாக இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள் ளது என தெரிவிக்கப்பட் டுள்ளது.மோடி அரசை விமர்சித்ததாக மத்திய அரசுக்கு வந்த மொட்டைக் கடிதம் ஒன்றின் அடிப்படையில் இந்த வாசிப்பு வட்டத்திற்கு ஐஐடி நிர்வாகம் தடை விதித்தது. இதை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம், வாலிபர் சங்கம், தமுஎகச சரிநிகர் மற்றும் பல்வேறு அரசியல் அமைப்புகள், முற்போக்கு பகுத்தறிவு இயக்கங்கள் தமிழகம் முழுவதும் போராட் டங்களை நடத்தி வந்தன. தில்லி ஐஐடி முன்பும் போராட்டம் நடைபெற் றது.எனினும் தடையை நீக்க மோடி அரசு மறுத்துவந்தது. இந்நிலையில் இந்தப் பிரச்சனை தொடர்பாக ஐஐடி நிறுவனத்தின் இயக்குநரிடமும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையிடமும் விளக்கம் கேட்டு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பதிலைப் பெற்றிருந்தது. மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளு டன் திங்களன்று பேச்சுவார்த்தை நடத்த இருந்தது.இந்நிலையில் வாசிப்புவட்டத்திற்கு விதிக்கப்பட் டிருந்த தடை நீக்கப்பட் டுள்ளது.

No comments: