Saturday 26 September 2015

26.09.15 நடைபெற்ற TNTCWU மாவட்ட செயற்குழு கூட்டம்...

அருமைத் தோழர்களே! 26.09.2015 அன்று மதுரை மாவட்ட ஒப்பந்த ஊழியர்களின் TNTCWU மதுரை மாவட்ட சங்கத்தின்  செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவர்   தோழர். K வீரபுத்திரன் தலைமையில் மிகவும் சீரும் சிறப்புமாக, மதுரை  BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மறைந்த தலைவர்கள், தோழர்கள் P. முருகேசன், D.J.J.பெத்தேல் ராஜ் ஆகியோருக்கு செயற்குழு அஞ்சலி செலுத்தியது...
அதன்பின், செயற்குழுவின்  நோக்கம், ஆய்படு பொருள் மீதானவை குறித்தும் TNTCWU மாவட்ட செயலர் தோழர்.N. சோணைமுத்து விளக்கினார். எதிர்வரும் அக்டோபர் 3, 4 தேதிகளில் , நாகர்கோவிலில் நடை பெற உள்ள ஒப்பந்த ஊழியர்களின் அகில இந்திய மாநாடு, அதனையொட்டி உள்ள கடமைகள் குறித்தும், BSNLEU மதுரை மாவட்ட செயலர் தோழர். S.சூரியன் துவக்கவுரை நிகழ்த்தினார்.

ஆய்படு பொருளின் விவாதத்தில் கிளைச் செயலர்களும், மாவட்ட சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.  அகில இந்திய மாநாட்டிற்கு சார்பாளர்களும், தீர்மானங்களும்முடிவு செய்யப்பட்டது. மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள், அன்பழகன், ஜான் போர்ஜியா, சந்திரசேகர் ஆகியோர் வாழத்துரை வழங்கினர். இறுதியாக மாவட்ட பொருளர்  தோழர். R. சுப்புராஜ் நன்றி கூற செயற்குழு இனிதே நிறைவுற்றது.

No comments: