Thursday 10 September 2015

உங்களுக்கு . . . தெரியுமா ?.

ஒரு LPG சிலிண்டர் வாங்கி அது தீர்ந்து இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும்.அந்த வேளைவரை அதைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ.40 லட்சம், காப்பீட்டுத் தொகையும் அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்று தெரியவில்லைஇது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிலிண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து யாரும் அந்தக் காப்பீட்டுத் தொகையை கேட்டு உரிமை கோரு வதில்லை.
நாம் சிலிண்டருக்காக ஒவ்வொரு முறையும் கொடுக் கும் தொகையிலும் அந்தக் காப்பீட்டுக்கான பாலிசி தொகையையும் சேர்த்துதான் செலுத்தி வருகிறோம். இந்தக் காப்பீடு குறித்து அரசாங்கமோ, எண் ணெய் நிறுவனங்களோ கூட வாடிக்கை யாளர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்துவது இல்லை.சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேர்ந்தால் சட்டப்படி ந்தக் குடும்பம் ரூ. 50 லட்சம் வரை சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்.

No comments: