Tuesday 15 September 2015

கேரளா BSNL - CGM -ஐ கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்...

அருமைத் தோழர்களே ! கேரளா BSNL - CGM-ன் தொழிலாளர் விரோத, BSNL நிறுவன விரோத நிலைபாட்டினை கண்டித்து மதுரை GM அலுவலகத்தில் 14.09.15 திங்கள் மதியம் 1 மணிக்கு BSNLEU-SNEA-TNTCWU சங்கங்கள் சார்பாக   எழுச்சி மிகு  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தோழர்கள் C. செல்வின் சத்தியராஜ், M.சந்திர சேகர் இருவரும் கூட்டு தலைமை ஏற்று செயல் பட்டனர். ஒரு குறுகியகால ஏற்பாடாகினும்,40க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட  கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட தோழர்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டது சிறப்பம் சமாகும்....

கேரளா மாநில CGM நிர்வாகம், கார்பரேட் அலுவலக வழிகாட்டுதலுக்கு மாறாக BSNLEU-SNEA மத்திய,மாநில,மாவட்ட நிர்வாகிகளை முறையான முகாந்தரம் இல்லாமல் தொழிற் சங்க விரோத நடவடிக்கையாக பணி இடைநீக்கம் செய்தது மிகவும் கண்டிக்கத்தக்க வையாகும். உடனடியாக டெல்லி கார்பரேட் நிர்வாகம் குறிப்பாக BSNL-CMD நிர்வாகம் கேரள CGM மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதமின்றி BSNLEU-SNEA  சங்க நிர்வாகிகள் மீது தொடுக்கப் பட்டுள்ள பணி இடைநீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் தோழர்கள் S, சூரியன், K. தெய்வேந்திரன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இறுதியாக தோழர். N.சோனை முத்து நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

No comments: