Thursday 13 February 2014

வெண்மணி நினைவாலய திறப்புவிழா-தீக்கதிர் சிறப்பிதழ்

தியாக பூமியாம் வெண்மணியில் பிரம் மாண்டமாகவும், எழில்மிகு தோற்றத்துடனும் கட்டப்பட்டுள்ள வெண்மணி தியாகிகள் நினைவாலய திறப்பு விழா 9.3.2014 அன்று நடைபெறவுள்ளது.நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் மிகுந்த இந்த விழாவின் செய்தியை திக்கெட்டும் கொண்டு செல்லும் வகையில் 2.3.2014 அன்று தீக்கதிர் சிறப்பிதழ் ஒன்றை கொண்டு வரவுள்ளது. கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளின் அகில இந்திய, தமிழகத் தலைவர்களின் கட்டுரைகள், வெண்மணி தியாகம் குறித்த வரலாற்று ஆவணங்கள் சிறப்பிதழில் இடம் பெற வுள்ளது.கூடுதல் பக்கங்களுடன் வெளியாகும் அன்றைய தீக்கதிரின் விலை ரூ.5/-கூடுதல் பிரதி வேண்டுவோர் முழுத் தொகையை யும் 25.2.2014க்குள் செலுத்தி அந்தந்த பதிப்பு அலுவலகங்களில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டு கிறோம்.

No comments: