Wednesday 26 February 2014

மதுரை மாவட்டத்தில் BSNLEU&TNTCWUஆர்ப்பாட்டம். . .

அருமைத் தோழர்களே! நமது BSNLEU & TNTCWU ஆகிய இரு மத்திய சங்கங் களின் அறைகூவல் அடிப்படையில் நமது மதுரை மாவட்டத்தில் பொது மேலாளர் அலுவலகத்தில் தோழர்கள்.S.மேனுவல் பால்ராஜ் ,K.வீரபத்திரன் ஆகியோரின்  கூட்டுத்தலைமையில் சக்தியாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் 23 பெண்கள் உட்பட கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டது மிகவும் சிறப்பம்சமாகும். கோரிக்கைகளை விளக்கி ஒப்பந்த ஊழியர்களின் மாவட்டச் செயலர் தோழர்.என்.சோனை முத்து ,BSNLEU சங்கத்தின் மாவட்டச்செயலர் தோழர்.எஸ்.சூரியன் விளக்கிப் பேசினர்.போராட்டத்தை வாழ்த்தி இரு மாவட்ட சங்கங்களின் உதவி  செயலர்,தோழர் .V. சுப்புராயலு,மாநில உதவித் தலைவர் தோழர்.எஸ்.ஜான் போர்ஜியா ஆகியோர் உரை பேசினார்.இறுதியாக TNTCWU மாவட்ட பொருளர் தோழர்.R.சுப்புராஜ் நன்றிகூற,ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

No comments: