Tuesday 13 October 2015

12.10.15 டெல்லியில் நமது BSNL-FORUM கூட்ட முடிவு...

அருமைத் தோழர்களே! 12.10.15 அன்று  டெல்லியில் நடைபெற்ற  நமது BSNL-FORUM கூட்டம் எதிர் வரும் 19.10.15 திங்கள் அன்று மத்திய, மாநில, மாவட்ட தலைநகரங்களில்  FORUM சார்பாக போனஸ் கோரி தர்ணா போராட்டத்தை சக்தியாக நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது. நாம் ஏற்கனவே, கடந்த  6.10.15 அன்று நாடு முழுவதும் இதே போனஸ் கோரிக்கைக்காக சக்தியான ஆர்பாட்டத்தை FORUM சார்பாக நடத்தினோம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, BSNL பணிபுரியும் அனைவருக்கும் போனஸ் என்று  நமது FORUM வைத்துள்ள கோரிக்கை வெற்றிபெற 19.10.15 நாடு தழுவிய தர்ணா போராட் டத்திற்கு மதுரை தல்லாகுளம், லெவல்-4 வளாகத்தில் பங்கேற்பிற்கு இப்போதிருந்தே திட்டமிட்டு செயலாற்றிட அனைத்து கிளைகளையும் கேட்டுக்கொள்கிறோம்... போராட்ட வாழத்துக்களுடன், S. சூரியன் -D/S-BSNLEU.

No comments: