Tuesday 6 October 2015

போனஸ் வழங்க கோரி 6.10.15 நடைபெற்ற ஆர்பாட்டம்...

அருமைத் தோழர்களே ! இந்திய நாடு முழுவதும் BSNL-லில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறித்தி 6.10.15 நடைபெற்ற ஆர்பாட்டத்தின் ஒரு பகுதியாக  மதுரை தல்லாகுளம், லெவல்-4 பகுதியில் , மதுரை மாவட்ட FORUM சார்பாக,  AIBSNLEA மாநில சங்க நிர்வாகி தோழர் அருணாச்சலம் தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மிகவும் சக்தியாக நடைபெற்றது...
தோழர்.N.செல்வம்,ORG-SECY,BSNLEU, உணர்ச்சி மிக்க கோஷம் எழுப்பினார்.ஆர்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி, தோழர்.L.கண்ணன்,D/S-WRU,தோழர். N. முருகன்,D/S-TEPU, தோழர். S. முத்துகுமார்,D/S-FNTO, தோழர். S. சுப்பிரமணியன்.D/S-AIBSNLEA, தோழர். P.அழகுபாண்டிய ராஜா,C/S-SNATTA, தோழர். K. தெய்வேந்திரன்,D/S-SNEA, தோழர்.C. செல்வின் சத்தியராஜ்,ACS-BSNLEU ஆகியோர் உரையாற்றினர். ஆர்பாட்டத்தில் சில நூற்றுக்கணக்கான ஊழியர்களும், அதிகாரிகளும் சக்தியாக கலந்து கொண்டனர் என்பது சிறப்பம்சமாகும்...
நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து சங்க நிர்வாகிகளுக்கும், அங்கத்தினர் களுக்கும், மதுரை மாவட்ட  FORUM கன்வீனரும், BSNLEU மதுரை மாவட்ட செயலருமான  தோழர்.S. சூரியன் நன்றி கூறி உரை நிகழ்த்தினார். 

No comments: