Sunday 18 October 2015

17.10.15 எழுச்சியுடன் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டம்...

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம், மாவட்டத் தலைவர் தோழர். சி. செல்வின் சத்தியராஜ் தலைமையில்  17.10.15 அன்று மாலை நமது BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது ...
அணைவரின் அன்பையும், பாரட்டுக்களையும் பெற்று வாழந்து மறைந்த தோழர்.D.J.J. பெத்தல் ராஜ் அவர்களின் மறைவிற்கு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தோழர். S. ஜான் போர்ஜியா, மாநில துணைத் தலைவர் கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்.
அதன் பின் கூட்டத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கை குறித்தும், கூட்டத்தின் நோக்கம் குறித்தும், மாவட்ட செயலர், தோழர் S. சூரியன் விளக்க உரை நிகழ்த்தினார். ஆய்படு பொருளின் மீது 21 தோழர்கள் விவாதத்தில் பங்கெடுத்து தங்களின் ஆழமான கருத்தை பதிவு செய்தார்கள்.

No comments: