Wednesday 21 May 2014

நடந்தவை ..19.05.14 போடி கிளை மாநாடு ...

அருமைத் தோழர்களே!

19.05.14 அன்று மாலை 6 மணிக்கு மேல் போடி தொலை  பேசியகத்தில் BSNLEU + TNTCWU இரு சங்கங்களின் இணைந்த கிளை மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தோழர்.டி .முருகன் தலைமை தங்கினார். தோழர்கள், முருகன், பிச்சைமணி ஆகியோர் கொடியேற்றி வைத்தனர். தோழர்.ஆர் .ஹரிகிருஷ்ணன் வரவேற்பு உரை நிகழ்த்தினார். தோழர் எம்.சோணைமுத்து துவக்கவுரை நிகழ்த்தினார்.தோழர்கள், P .தேசிங் , டி .கே .சீனிவாசன்,எஸ்.கண்ணன்,தங்கத்துரை,மற்றும் தோழர். எஸ்.கே. பாண்டியன்,CITU ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.தோழர்.பி .சந்திரசேகர்,கிளைச் செயலர் ஆண்டறிக் கையை சமர்ப்பித்தார். தோழர்.எஸ்.ராஜேந்திரன் வரவு-செலவு கணக்கை சமர்பித்தார்.ஏற்பிற்கு பிறகு புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக் கப்பட்டது. மாநாட்டில் முறையே, தலைவர், செயலர், பொருளராக தோழர்கள்S.சேதுராமன்,R.ஹரிகிருஷ்ணன்,S.முருகன் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.இறுதியாக மாவட்டசெயலர் தோழர்.எஸ்.சூரியன் நிறைவு உரை நிகழ்த்தினார். தோழர்.எஸ்.முருகன் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது. மாநாட்டை எப்பொழுதும் போல் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய தோழர்.பி .சந்திர சேகர் அவர்களுக்கு மாவட்ட சங்கம் பாராட்டுக்களை உரித்தாக்குகிறது. புதிய நிர்வாகிகள் பனி சிறக்க...
----நமது வாழ்த்துக்கள்...எஸ்.சூரியன் --D/S-BSNLEU. 

No comments: