Friday 9 May 2014

கட்டுரைப் போட்டியில் மதுரை மாணவி தேர்வு . . .

ஐரோப்பிய யூனியன் நடத்திய கட்டுரைப் போட்டியில், இந்திய அளவில் மதுரை மாணவி பத்மசந்தியாதேர்வுசெய்யப்பட்டார்.
மதுரை சொக்கிக்குளம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அலுவலர் ஸ்ரீகாந்த். இவரது மகள் பத்மசந்தியா. நரிமேடு கேந்திரிய வித்யாலயாவில் பிளஸ் 2 படிக்கிறார்.இந்திய அளவில் ஐந்து பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அவர், ஐரோப்பிய யூனியன் நாடுகளான இத்தாலி, பிரான்ஸ், ஆஸ்திரியா, ஹங்கேரி செக்கோஸ்லோவாகியாவுக்கு செல்ல உள்ளார். நேற்று அவர் கலெக்டர் சுப்ரமணியனை சந்தித்தார்.மாணவி கூறுகையில், ''போட்டியில் 3 தலைப்புகள் தந்தனர். ஐரோப்பிய யூனியனுடனான உண்மையான ஒத்துழைப்புக்கு 5 புதிய திட்டங்கள்' (பைவ் நியூபுரபோசல்ஸ் பார் புரூட்புல் கோ ஆப்பரேஷன்) என்ற தலைப்பில் கட்டுரை எழுதினேன். இதில் இருநாடுகளுக்குள் ஆயுர்வேதம், கிரிக்கெட் தவிர்த்த வேறு விளையாட்டுக்கள், கைவினைப் பொருட்கள், ஏற்றுமதி, கழிவுப் பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரிப்பு ஆகியவற்றை செயல்படுத்தலாம்' என்ற தெரிவித்து இருந்தேன்,'' என்றார் நமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.  ---எஸ். சூரியன் ... D/S-BSNLEU

No comments: