Sunday 25 May 2014

24.05.2014 - பரவசமூட்டிய பழனி செயற்குழு ...

அருமைத் தோழர்களே ! 24.05.14 அன்று நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம்,மாவட்டத் தலைவர் தோழர்.சி .செல்வின் சத்தியராஜ்தலைமையில் மிகவும் சீரும் சிறப்புமாக பழனியில்  நடைபெற்றது. மாலை  5 மணி வரை நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 5 பெண்கள் உட்பட 73 பேர் கலந்து கொண்டனர்.
பரவசமூட்டிய செயற்குழு :-
செயற்குழு கூட்டத்தில்,21.05.14 அன்று மறைந்த,உழைக்கும்  மக்கள் தலைவர் தோழர்.ஆர்.உமாநாத் அவர்களுக்கு, மாவட்ட உதவிச் செயலர், தோழர்.A. நெடுஞ்செழியன், அஞ்சலி உரை நிகழ்த்த,மாவட்ட செயற்குழு மவுன அஞ்சலி செலுத்தியது. மழைகானது காத்திருக்கும் மண்ணில், அடைமழை பெய்தால்  எவ்வாறு நிலம் குளிர்ச்சி பெறுமோ, அதைப்போன்று, மாநிலச் செயலர் அருமைத்தோழர்.எஸ்.செல்லப்பா அவர்கள் நமது மாவட்ட செயற்குழுவிற் கான  வருகையை ஒப்பீட்டு நமது கிளைச் செயலர் ஒருவர்  பேசினார் என்பது,மிகவும்  குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சமாகும். செயற் குழுவை,நமது மாநில உதவித் தலைவர் தோழர்.எஸ்.ஜான் போர்ஜியா துவக்கி வைத்து உரைநிகழ்த்தினார்.
மாவட்ட செயலர், தோழர்.எஸ்.சூரியன், ஆய்படு பொருளின் மீது 6 பக்க அறிக்கைமீதான அறிமுக உரையை நிகழ்த்தினார். அதன்பின் ஆய்படு பொருளின் மீது விவாதத்தில் 26 தோழர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். அதன்பின் மாநில செயலர் தோழர்.எஸ். செல்லப்பா அவர்கள், அனைத்து பிரச்சனைகளையும் உள்ளடக்கி,நமது மத்திய,மாநில,மாவட்ட,கிளைச் சங்கங்களின் செயலாக்கம் குறித்தும்,நமது BSNL நிறுவனம் மற்றும் நமது இந்திய நாட்டில் 26.05.14 அன்று அமையவிருக்கிற BJP மத்திய அரசு குறித்தும் முழுமையானதகவலுடன்அனைவரும்பாராட்டதக்கஅளவிலான   சிறப்புரையை  நிகழ்த்தினார்.
இறுதியில் மாவட்டச் செயலர் தோழர் எஸ்.சூரியன், விவாதத்தில் வந்த கருத்துக்களுக்கும், கோரிக்கை தீர்வுகளுக்கான போராட்ட திட்டம் குறித்தும் மாநில சங்க வழிகாட்டுதலுடனான முடிவுகளையும் மாவட்ட செயற்குழு ஏற்பிற்காக தொகுப்புரை நிகழ்த்தினார். அதன்பின்மாவட்டத்தலைவரால்முடிவுகள் குறித்து  ஒப்புதல் செயற்குழுவில் பெறப்பட்டது. இறுதியாக மாவட்டபொருளர், தோழர்.எஸ்.மாயாண்டி நன்றியுரை நிகழ்த்த மாவட்டச் செயற்குழு இனிதே நிறைவுற்றது.(அடுத்த லோக்கல் கவின்சிலுக்கான பிரச்சனைகள் இருப்பின் உடனடியாக மாவட்ட சங்கத்திற்கு அனுப்பி வைக்கவும்)     ---என்றும் தோழமையுடன் ..எஸ்.சூரியன் --D/S-BSNLEU.

No comments: