Thursday 16 April 2015

15.04.2015 அவசர மாவட்ட செயற்குழு கூட்டம்...

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU மாவட்ட சங்கத்தின்  அவசர மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் தலைமையில், தல்லாகுளம் CSC/TRC யில் 15.04.2015 அன்று நடைபெற்றது. செயற்குழு மறைந்த நத்தம் கிளைச் செயலர் தோழர் சி. ஜெயராமன்,  அனைவராலும் ஐ.ம.பா என அன்போடு அழைக்கப்படும் சுதந்திர போராட்ட தியாகி தோழர். ஐ.மாயன்டிபாரதி,   எழுத்தாளர் ஜெயகாந்தன் மற்றும் இசை வேந்தர் நாகூர் ஹானிபா ஆகியோர்   மறைவிற்கும் மாவட்ட செயற்குழு அஞ்சலி செலுத்தியது. அதன் பின்  மாநில உதவிச் செயலர் தோழியர்.இந்திரா துவக்கிவைத்து உரையாற்றினார்..  
மாவட்ட செயலர் தோழர்.S.சூரியன்  தமிழகத்தில் 1 லட்சம்  கையெழுத்து இயக்கத்தில்  மதுரை மாவட்டம் தமிழகத்திலேயே முதல் மாவட்ட மாக 80 ஆயிரம் கையெழுத்துக்கு மேல் பெற்று கொடுத்துள்ள அனைத்து தோழர்களையும், குறிப்பாக இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் AIIEA மற்றும் CITU தலைமையில் ஆன தொழிற்சங்க கூட்டமைப்பு, TNTCWU, குறிப்பாக தேனி ரெவன்யு மாவட்ட தோழர்கள் எடுத்த நல்ல முயற்சி மற்றும் பழனி , மதுரை ,திண்டுக்கல் உட்பட மதுரை SSAயில் உள்ள அனைத்து கிளைகளையும் பாராட்டி நன்றி கூறினார்.
 மேலும் அதிமுக்கியமாக எதிர்வரும் ஏப்ரல் 21 & 22 ஆகிய இரு நாட்கள் இந்திய நாடு முழுவதும் BSNL ஊழியர்களும், அதிகாரிகளும் நடத்த உள்ள தேச  போராட்டமான "SAVE BSNL" இயக்கத்தில் இதுகாறும் நமது மாவட்டத்தில் நடந்துள்ள பணிகள் குறித்தும் அதிமுக்கியமாக  மதுரை மாவட்டத்தில் 100 சதம் போராட்டத்தை வெற்றியடைய செய்வதற்கான திட்டங்கள் குறித்தும், கிளச்சங்கங்கள்  மிக நெருக்கமாக ஊழியர்களை அணுகி முழுவீச்சில் போராட்டத்தை வெற்றியாக்கிட மாவட்ட சங்க நிர்வாகிகளும் பூர்ண ஒத்துழைப்பை நல்க வேண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
மாவட்ட சங்க நிர்வாகிகளும், கிளச்செயலர்களும் போராட்டத்தை மேலும் முன்னெடுத்து செல்வதற்கான  ஆலோசனைகளையும் முன் வைத்தார்கள். இறுதியாக மாவட்ட பொருளர் தோழர்.எஸ். மாயான்டி நன்றி கூற மாவட்டச்  செயற்குழு  நிறைவுற்றது. செயற்குழு ஒருமனதாக ஏப்ரல் 21 & 22 போராட்டத்தை வெற்றிகர மாக்கிட  உறுதி  ஏற்றது.
--- போராட்ட  வாழ்த்துக்களுடன், எஸ். சூரியன் ...D/S-BSNLEU. 

No comments: